சோ. ராமேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 117: வரிசை 117:
* [http://noolaham.net/project/07/665/665.pdf சுதந்திரக் காற்று] நூலகம் திட்டத்தில்
* [http://noolaham.net/project/07/665/665.pdf சுதந்திரக் காற்று] நூலகம் திட்டத்தில்
* [http://www.tamilnool.com/izathunoolgal/field_list.php?field=Author&q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B நூல்கள் சில] தமிழ்நூல்.காம் இல்
* [http://www.tamilnool.com/izathunoolgal/field_list.php?field=Author&q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B நூல்கள் சில] தமிழ்நூல்.காம் இல்
{{சாகித்திய அகாதமி விருது}}


[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]

20:30, 30 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

சோ.ராமேஸ்வரன்
படிமம்:S.rameswaran.jpg
பிறப்பு(1950-03-31)மார்ச்சு 31, 1950
அனுராதபுரம், இலங்கை
தொழில்எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
மொழிதமிழ்
தேசியம்இலங்கையர்
காலம்1974 - இன்று மட்டும்
குறிப்பிடத்தக்க படைப்புகள்முகவரியைத் தேடுகிறார்கள்
கானல் நீர் கங்கையாகிறது
வாழ நினைத்தால் வாழலாம்
திசை மாறிய பாதைகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்அரச சாகித்திய விருது (2005, 2007)
சிறுவர் இலக்கியத் துறை - வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (1998, 2005)

சோ.ராமேஸ்வரன் (மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். இவர் எஸ்.ராமேஷ், ஆத்தியடியூரான், புஷ்பா தங்கராஜா, ஆர்.பிரசன்னா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். தற்சமயம் கொழும்பில் வாழ்கிறார்.


வாழ்க்கைக் குறிப்பு

தமிழ் இலக்கிய உலகில் சோ.ராமேஸ்வரன் நன்கு அறியப்பட்டவர். நிறையவே எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், நகைச்சுவைக் கதை, நாடகம், சிறுவர் இலக்கியம் என சகல துறைகளிலும் தன் திறமையை நிரூபித்தவர். இவை தவிர தொலைக்காட்சி நாடகங்களின் தயாரிப்பிலும் பங்காற்றியுள்ளார்.

இவரது முதலாவது நாவல் "யோகராணி கொழும்புக்கு போகிறாள்" 1992இல் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை 44 நூல்கள் தமிழ், ஆங்கிலம், மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்நூல்களின் பட்டியலில் ஏழு சிங்கள நூல்களும், இரு ஆங்கில நூல்களும் அடங்குகின்றன. மேலும் கண்நோய் பற்றி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.

1994க்கும் 2008க்கும் இடைப்பட்ட பத்து வருடங்களினுள் ராமேஸ்வரன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகள் சர்வதேசரீதியிலும், இலங்கையிலும் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்பது கதைகளைத் தொகுத்து "முகவரியைத் தேடுகிறார்கள்" என்ற மகுடத்தில் வெளியிட்ப்பட்ட சிறுகதைத் தொகுப்புக்கு 2005ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டல விருது கிட்டியது. அத்துடன் இவர் எழுதி வெளியிட்ட "கானல் நீர் கங்கையாகின்றது" என்ற நாடகம் 2006இல் சாகித்திய மண்டல விருதைப் பெற்றுள்ளது.

மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தினால் 1996இல் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ராமேஸ்வரன் எழுதிய "வடக்கும், தெற்கும்" என்ற நாவல் முதல் பரிசு பெற்றதுடன், இதே நாவல் அரச கரும மொழிகள் திணைக்களம் இன ஐக்கியத்தையும், மொழி வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு அகில இலங்கைரீதியில் ஏற்பாடு செய்திருந்த போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது. அத்துடன் இவர் எழுதிய "திசை மாறிய பாதைகள்" என்ற சிறுவர் நவீனம் 1998இலும், 'வாழ நினைத்தால் வாழலாம்" என்ற சிறுவர் நவீனம் 2005இலும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய போட்டியில் முதற் பரிசுகளைப் பெற்றன.

1998இல் அமைச்சுக்கிடையிலான அரச உத்தியோகத்தர்களின் ஆக்கப் படைப்புக்களில் இவர் எழுதிய "நியாயம், தர்மம்....." என்ற சிறுகதை முதல் பரிசைப் பெற்றது.


விருதுகள்

  • அரச சாகித்திய விருது (2005, 2007)
  • சிறுவர் இலக்கியத் துறை - வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (1998, 2005)


எழுதிய நூல்கள்

நாவல்கள்

  • யோகராணி கொழும்புக்கு போகிறாள் (1992)
  • இவர்களும் வாழ்கிறார்கள் (1993)
  • இலட்சியப் பயணம் (1994)
  • அக்கரைக்கு இக்கரைப் பச்சை (1995)
  • மௌன ஓலங்கள் (1995)
  • வடக்கும் தெற்கும் (1996)
  • இன்றல்ல, நாளையே கலியாணம் (1996)
  • சத்தியங்கள் சமாதிகளாவதில்லை (1996)
  • இந்த நாடகம் அந்த மேடையில் (1997)
  • உதுர சஹ தகுண (சிங்களம்) (1998)
  • சிவபுரத்து சைவர்கள் (1998)
  • நிலாக்கால இருள் (2000)
  • சிவபுரத்து கனவுகள் (2000)
  • கனகு (2003)
  • மணமாலிய வீ ஹெற்ற தவஸே (சிங்களம்) (2006)
  • யாழினி (2007)
  • பண்டார சஹ சசி (சிங்களம்) (2008)


குறுநாவல்

  • நிழல் (1998)


சிறுகதை

  • சுதந்திரக் காற்று (1994)
  • பஞ்சம் (1995)
  • நிதாஸே வா ரலி (சிங்களம்) (1996)
  • புண்ணிய புமி (1997)
  • புண்ய புமி (சிங்களம்) (1998)
  • புதிய வீட்டில் (2000)
  • போராட்டம் (2001)
  • முகவரியைத் தேடுகிறார்கள் (2004)
  • ஒரு விடியல் பொழுதில் (2006)
  • திவய உதேஸா திவி புதன்னோ (சிங்களம்) (2007)
  • கலாசார விலங்குகள் (2008)


நாடகம்

  • கானல் நீர் கங்கையாகின்றது (2006)
  • கறுப்பும் வெள்ளையும் (2008)


சிறுவர் இலக்கியம்

  • படித்து மகிழ பயன்மிகு பத்துக் கதைகள் (1997)
  • திசை மாறிய பாதைகள் (நவீனம்) (1998)
  • சதியை வென்ற சாதுரியம் (2001)
  • அந்த அழகான பனை (2002)
  • வாழ நினைத்தால் வாழலாம் (2005)
  • மவ ரக்ககென் வீர புத்தா (சிங்களம்) (2006)
  • தாயைக் காத்த தனயன் (2007)


மொழிபெயர்ப்பு - ஆங்கிலம்/தமிழ்

  • துயரத்தில் வருந்துவது ஏன்?
  • ஆரோக்கியமான கண்கள் செயற்பாட்டு நூல்


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._ராமேஸ்வரன்&oldid=1008938" இலிருந்து மீள்விக்கப்பட்டது