சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன மருமகள்
உருவாக்கம்டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட்
எழுத்துDamini Kanwal Shetty, S.Manasvi
இயக்கம்Mohit Kumar Jha
நடிப்புகீழே பார்க்க
முகப்பிசை"Choti Bahu" by Pamela Jain
நாடு இந்தியா
மொழிதமிழ், ஹிந்தி
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்Tony Singh & Deeya Singh
ஓட்டம்அண்ணளவாக 23 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
படவடிவம்480-இ (சீர்துல்லியத் தொலைக்காட்சி)
ஒளிபரப்பான காலம்present
வெளியிணைப்புகள்
இணையதளம்

சின்ன மருமகள் (ஆங்கிலம்: Choti Bahu-Sindoor Bin Suhagan) என்பது ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் தமிழ்த் தொடராகும். இந்தத் தொடர் ஹிந்தியில் சோட்டி பஹூ-சிந்தூர் பின் சுகாகன் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்தப் பெயர் குறிப்பிடுவதுபோல், இந்தக் கதை குடும்பத்தின் சின்ன மருமகளையும் பாரம்பரிய இந்திய சமூகத்திலும் கவனம் செலுத்துவதாக இருக்கிறது.[1] தொலைக்காட்சி தொடர்களின் மாறிவரும் பின்னணிகள் குறித்த ஒரு கட்டுரையில், தயாரிப்பாளர் ஏக்தா கபூர், "தொலைக்காட்சி மிகவும் நாட்டுப்புறப் பார்வையாளர்களுக்கென்று ஆகிவிட்டது. இது ஒரு புதிய பார்வையாளர், மிகவும் பரவசமான பார்வையாளர். அவருக்கு பார்வை நேரம் நிறைய இருக்கிறது. இயல்பாகவே, கதையம்சம் மாறிவருகிறது. நாட்டுப்புறக் கதைகள் குழந்தைத் திருமணம், வரதட்சிணை மரணம், பெண் சிசுக்கொலை போன்ற பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்தும் பெரிய அளவிற்கு சமூக அக்கறையுள்ள கதைகளுக்கு வழியமைப்பவையாக இருக்கின்றன. ஒரு நாளின் முடிவில் தொலைக்காட்சி வெகுவாக மக்களுக்கானது என்பதால் இது உண்மையான இந்தியாவை கவனப்படுத்துகிறது. நான் நாட்டுப்புறப் பார்வையாளர்களுக்கான நிகழ்ச்சிகளை தயாரிப்பேன். நான் மரியாதைக்குரிய பார்வையாளரின் மீது தாக்கமேற்படுத்தாதவரை நமது புதிய பார்வையாளரான நாட்டுப்புற பார்வையாளர் மீதே என்னுடைய கவனம் இருக்கும்" என்று கூறினார்.[2] இந்தத் தொடர் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 10 இல் ஒளிபரப்பப்படுவதாக இருந்தது, ஆனால் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 9 இல் தொடங்கிய "இந்திய தொலைக்காட்சி வேலைநிறுத்தத்தால்" டிசம்பர் 8 2008 வரை தள்ளிவைக்கப்பட்டது.

கதைக்கரு[தொகு]

விருந்தாவன் என்ற ஆன்மீகப் பற்றுள்ள ஊரில் வளரும் ராதிகா என்ற இளம்பெண்ணின் மனதை உருக்கச்செய்யும் கதையாக சோட்டி பஹூ இருந்தது. அவர் தத்தெடுக்கப்பட்டவர். அவர் அவருடைய தந்தை, தாயார், சகோதரி மற்றும் அம்மாவுடன் வசிக்கிறார். அம்மா அவரை வெறுக்கிறார். அவர் தேவ் புரோகித்தை சந்திக்குவரை அவர் மிகவும் எளிமையானவராக இருக்கிறார். தேவ் அவளைப் பார்த்தவுடனேயே காதலில் விழுகிறார், அவளும் காதல் வயப்படுகிறாள். தேவ் அவளுடைய பெயர் அவளுடைய சகோதரியின் பெயரான விஷாகா என்று நினைத்துக்கொள்கிறார். அவர் தன்னுடைய பெற்றோர்களிடம் இதைப்பற்றி கூற அவர்கள் ராதிகாவின் தந்தை வீட்டிற்குச் சென்று திருமண நிச்சயம் செய்கின்றனர். இதைக்கேள்விப்பட்ட ராதிகா தன் சகோதரி மகிழ்ச்சியாக இருப்பதற்காக எதையும் செய்ய தீர்மானிக்கிறார். மற்றொரு பக்கம் விஷாகா நடிகையாவதற்கு மும்பைக்கு ஓடிப்போக வேண்டும் என்று நினைக்கிறார். திருமண நாளில் விஷாகா ராதிகாவிற்கு திருமண உடை உடுத்தி தனக்கு திரைப்பட பரிசோதனை இருப்பதால் அந்த இடத்தில் அவரை வைத்துவிட்டுச் செல்கிறார். அதிர்ஷ்டத்தினால் ராதிகாவிற்கும் தேவிற்கும் திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்தபிறகு விஷாகா திரும்பி வருகிறாள், அம்மா மற்றும் அவளுடைய தாயாரின் உதவியோடு திருமண உடை உடுத்தி தேவின் வீட்டிற்கு செல்கிறாள். விஷாகா தான் காதலித்தவரின் பெயர் அல்ல என்பதைத் தெரிந்துகொள்ளும் தேவ் ராதிகாவை வீட்டிற்கு திருப்பி அனுப்பி விடுகிறார். இவ்வாறு ஒரு நீளமான, மனதை உருகச் செய்யும் கதை தொடங்குகிறது. மிக முக்கியமான நிகழ்ச்சிகளுக்கிடையே அம்மா ராதிகாவின் அறையில் மண்ணென்ணையை ஊற்றி அவர் மிக மோசமாக காயமடைவதற்கு காரணமாகிறார். அதிலிருந்து அவர் முற்றிலும் குணமாகிறார் என்பதோடு அம்மாவால் முயற்சிக்கப்படும் வேறு சில முயற்சிகளிலிருந்து குறிப்பாக பாம்பை விட்டு கடிக்கச்செய்வது போன்றவற்றிலிருந்து தப்பிக்கிறார். அவர் எல்லோர் முன்னிலையிலும்தான் தேவைத் திருமணம் செய்துகொண்டார் என்பதால் அவர் டெல்லியை நோக்கி (தேவ் வீட்டிற்கு) செல்கிறார். விஷாகா அவளுடைய காதலராக இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய விக்ரம் என்பவரிடமிருந்து அவளுக்கு மும்பையிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவள் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதுபோல் தோன்றுகிறது.

ராதிகா சாஸ்திரி புரோகித் (வயது 20)[தொகு]

ராதிகா தானாகவே எதிர்த்துப் போராட மறுக்கிறார் என்பதோடு தன்னைக் காப்பாற்ற கிருஷ்ண பரமாத்வையே நம்பியிருக்கிறார், ஆனால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை காப்பாற்ற வேண்டிய நிலை வரும்போது பலவீனமாகவும், அழுதுகொண்டும் இருப்பதை விடுத்து கானாவின் உதவியோடு துணிச்சலையும், புத்திசாலித்தனத்தையும் காட்டுகிறார். ராதிகா புரோகித் சோட்டி பஹுவாக ஆவதைத் தடுப்பதற்கு, தன்னுடைய நேரடி பேத்தியான விஷாகாவிற்கே இந்த உரிமை உள்ளது என்று நம்பும் அம்மாவின் மற்றொரு முயற்சியில் அவளுடைய திருமண நாளில் அவள் அறைக்கு தீ வைக்கப்படுவதால் அவள் "ஐம்பது சதவிகிதம்" எரிந்துபோனவளாக காணப்படுகிறாள். ராதிகா இப்போது அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறாள். அவள் டெல்லியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள்.

தேவ் ராஜ் புரோகித் (வயது 25)[தொகு]

தேவ் ஒரு புத்திசாலியான நேர்மையான பையன். அவன் ராதிகாவை அதிகம் நேசிக்கிறான். அவன் விஷாகா தன்னுடைய முதல் மனைவி என்றும், சமூகம் ராதிகாவை இரண்டாவது மனைவி என்று அழைக்கும் என்றும் நினைக்கிறான். அவன் தன்னுடைய குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். இப்போது அவன் விரும்பிய ராதிகா என்ற பெண்ணுடம் திருமணம் நிச்சயப்பட்டிருக்கும் நிலையில் அவன் அவளைப் பற்றியே இரவும் பகலும் நினைத்துக்கொண்டிருக்கிறான். தேவ் புரோகித்தின் வீட்டினுடைய வாரிசு. அவனும் ராதிகாவும் புரோகித் வீட்டிற்கு ஒரு வாரிசை உருவாக்க முயற்சிக்கின்றனர், அதை மிருணாளினி வெறுக்கிறாள், தன்னுடைய கணவனின் இயாலாமையினால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத அவள் அர்ஜூனுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு தான் கர்ப்பமடைந்தது ஒரு அதிசயம் என்று சொல்லிக்கொள்கிறாள்.

பண்டிட் பிரிஜ் மோகன் சாஸ்திரி (வயது 55)[தொகு]

பண்டிட் பிரிஜ் மோகன் ராதிகாவின் தத்தெடுப்பு தந்தை என்பதோடு விஷாகாவின் நேரடி தந்தையுமாவார், விஷாகாவின் அச்சுறுத்தக்கூடிய சுதந்திரத்தினால் ஏற்பட்ட அவமதிப்புகளால் பாதிக்கப்பட்டு அவர் குடும்பத்தினரிடமிருந்து விலகியே இருக்கிறார்.

தேவகி சாஸ்திரி (வயது 42)[தொகு]

தேவகி தன்னுடைய மகள்களை சமமாகவே நேசிக்கிறார் ஆனால் ராதிகா அம்மாவின் கரங்களில் சிக்கி பயங்கரமான முறையில் பாதிக்கப்படுகையில் அதற்கு உதவ இயலாமல் சில துளி கண்ணீர் மட்டுமே சிந்துகிறார் என்பதோடு அவ்வப்போது அம்மாவிடம் அவருடைய தவறான கற்பனைகளை கைவிடும்படி கெஞ்சுகிறார்.

விஷாகா சாஸ்திரி (வயது 23)[தொகு]

விஷாகா பிரிஜ் மற்றும் தேவகிக்குப் பிறந்த அச்சமூட்டக்கூடிய வகையிலான சுதந்திரத்தைப் பெற்ற மகள். அவள் குறித்த அவள் குடும்பத்தினரின் திட்டங்களை எதிர்த்து சினிமா நடிகையாவது என்ற தன்னுடைய கனவை நிறைவேற்றிக்கொள்கிறாள். அவள் அங்கே மோசமான ஏதோ ஒன்றை செய்துவிட்டு விருந்தாவனுக்குத் திரும்புகிறாள், அது என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது. அவளுக்கு எப்போதும் விக்ரம் என்ற பெயர்கொண்ட ஒருவனிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன. விக்ரம் புரோகித் குடும்பத்தினர் விரும்பாத ஒருவன்.

அவன்தான் விஷாகாவின் காதலன். அவள் அவனை திருமணம் செய்துகொள்வாளாக இருந்தது. சமீபத்திய அத்தியாயத்தில், ராதிகா விக்ரமிடம் ஏதோ பேசச் சென்றபோது அம்மா காவல்துறையை அழைக்கிறாள், அவள் விசாகாவிடம் ராதிகாதான் காவல்துறையை அழைத்தாள் என்று கூறுகிறாள். தங்களுடைய திருமணத்தை நிறுத்தியதற்காக விஷாகா ராதிகாவின் திருமணத்தை அழிக்க சத்தியம் செய்கிறாள். புரப்பால் "குட்டீஸ்" என்றும் அழைக்கப்படுபவள்.

அம்மா (வயது 79)[தொகு]

பண்டிட் சாஸ்திரியின் தாயாரான அம்மா, விஷாகாவை நேசிக்கிறாள், ஆனால் ராதிகாவை அவர் தத்தெடுக்கப்பட்டவள் என்பதாலும், அவள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்பது தெரியாததாலும் அவளை ஒரு கெட்ட சகுனமாகவே கருதுகிறார். ராதிகாவின் மீது அவர் காட்டும் வெறுப்பும், அவளைக் காயப்படுத்த அவர் செல்லும் தொலைவும் மிகவும் பயங்கரமானவை. சமீபத்தில் - ராதிகாவின் திருமண நாளில் அவர் அவளுடைய திருமண அறைக்கு தீவைக்கிறார், இதனால் திருமண நிகழ்ச்சிகள் முடிவுறும் முன்பே ராதிகா மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். இப்போது ஒரு பாம்பைக் கடிக்கவிட்டு கானா அவளுடைய பாவங்களுக்காக அவரைக் தண்டிப்பதுபோல் தோன்றினாலும் அவர் புரிந்துகொள்வதாக இல்லை. அவர் எப்போதுமே ராதிகாவிடம் இந்தத் திருமணம் 'உஸ்கி விஷாகா கா ஹேக் ஹைன்' என்று கூறுகிறார், ஆனால் ராதிகா தேவை விரும்புவதாலும் அவனின்றி அவளால் வாழ முடியாது என்பதாலும் அவருடைய முட்டாள்தனங்களை அவள் கேட்டுக்கொள்வதில்லை.

மிஸ்டர்.புரோகித் (வயது 60) இறந்தவர்[தொகு]

விவேக் மற்றும் தேவின் தந்தையான மிஸ்டர். புரோகித் ராஜ் புரோகித்தின் பொறுப்பை தேவிற்கு தருகிறார். அவர் திடீரென்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டு படுக்கையில் மரணமடைகிறார்.

வைஷாலி புரோகித் (வயது 57)[தொகு]

விவேக் மற்றும் தேவின் தாயாரான வைஷாலி ராதிகாவைக் காட்டிலும் விஷாகாவையே தன்னுடைய மருமகளாக்க நினைக்கிறார், ஏனென்றால் அவர் தன்னுடைய எதிர்கால பேரன்கள் "வார்ன் ஷங்கர்" என்று அழைக்கப்பட விரும்பவில்லை. அம்மா மற்றும் மிருணாளினியின் உதவியோடு தேவிற்கும் ராதிகாவிற்கும் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்த விரும்புகிறார்.

தாதி (வயது 82)[தொகு]

தாதி ஒரு மென்மனமும் உணர்வுப்பூர்வமான அன்பும் கொண்ட புரோகித் கண்டனின் மூத்த தாயாராவார், பாரம்பரியமான மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்டவர் என்றாலும் அவை மோசமானவை என்று நிரூபணமான பின்பு அதை மாற்றிக்கொள்கிறார். அவர் தன்னுடைய பேரன் தேவ் உடன் நட்பான உறவைப் பேணுகிறார், தேவின் காதல் விருப்பமான ராதிகாவையும் நேசிக்கிறார்.

விவேக் புரோகித் (வயது 32)[தொகு]

விவேக் புரோகித் கண்டனின் மூத்த மகனாவார், ஆனால் அவர் ஊனமுற்றவர் என்பதாலும் குடும்ப வாரிசை உருவாக்கித்தர இயலாதவர் என்பதாலும் ராஜ் புரோகித்தோடு நெருக்கமில்லாமல் இருக்கிறார். அவர் மிருணாளினி அர்ஜூனுடன் காதல் உறவு கொண்டிருப்பதை தெரிந்துகொண்டிருந்தாலும் அது தெரியாததுபோல் நடந்துகொள்கிறார்.

மிருணாளினி புரோகித் (வயது 28)[தொகு]

மிருணாளின் புரோகித் கண்டனின் விரக்தியுற்ற படி பஹூ ஆவார். ராஜ் புரோகித்தின் தலைமைக்கு வர அவள் சுஷில் மற்றும் அர்ஜூனுக்கு பின்னணியாக இருக்கிறாள். அவள் ராதிகா புரோகித் குடும்பத்திற்கு ஒரு வாரிசைக் கொண்டுவந்துவிட்டால் தான் ஒரு வேலைக்காரியிடமிருந்து உத்தரவுகளைப் பெறவேண்டியிருக்கும் என்பதற்காக அச்சம்கொள்கிறாள், ஆனால் அவள் குறிப்பாக ராதிகாவின் மோசமான தொடக்கங்களால் அல்லாமல் தேவின் நிலையை தன்னுடைய காதலால் வலுப்படுத்தியும் அவருக்கு உதவியும் மற்றும் மிருணாளினியின் சவாலான களங்கப்படுத்தும் முயற்சிகளுக்கு அச்சம்கொள்ளாமலும் அவள் மிருணாளினியை அச்சமூட்டச் செய்கிறாள்.

சுஷில் புரோகித் (வயது 50)[தொகு]

தேவ் மற்றும் விவேக்கின் மாமாவான சுஷில் தன்னுடைய மகன் அர்ஜுனை ராஜ் புரோகித்தின் தலைமையாக்க நினைக்கிறார்.

அர்ஜுன் புரோகித் (வயது 27)[தொகு]

அர்ஜூன் சுஷிலின் மகன் என்பதோடு ராஜ் புரோகித்தின் தலைமைக்கு இரண்டாம் இடத்தில் இருப்பவன். அவன் மிருணாளியுடன் நெருக்கமான உறவு வைத்திருக்கிறான்.

திபீகா புரோகித் (வயது 22)[தொகு]

தீபிகா அர்ஜூனின் பப்ளியும் இனிய மனைவியுமாவாள், அவள் மிருணாளியுடனான அர்ஜூனின் உறவைப் பற்றி தெரிந்துகொள்ளாதவளாக இருக்கிறாள். அவள் எல்லோரிடமும் இனிமையாக நடந்துகொள்வதோடு மிருணாளிணியுடன் இருக்கவே விரும்புகிறேன் எனக் கூறுகிறாள்.

பிர்ஜூ (வயது 24)[தொகு]

பிர்ஜு தேவின் உற்சாகமான உற்ற நண்பன், அவன் புரோகித் கண்டனில் வேலை செய்கிறான்.

கேஷவ் சௌபே (வயது 25)[தொகு]

கேஷவ்தான் ராதிகா தேவை விரும்புகிறாள் என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாக அவளைத் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. இதைத் தெரிந்துகொண்ட உடனேயே அவர் ராதிகாவுடனான திருமணத்தை ரத்து செய்துவிடுகிறார்.

புரப் (வயது 22)[தொகு]

புரப் விருந்தாவனில் நடக்கும் இசை வீடியோவில் விஷாகாவை நடிக்கச்செய்ய ஏற்பாடு செய்பவன் என்பதோடு அவள் மும்பையில் சினிமா நட்சத்திரமாவதற்கான சோதனையின்போது அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறான். அவன் தன்னுடைய ஆவாரா மற்றும் சாலையோர ரோமியோ வாழ்க்கைமுறையால் அந்த நிகழ்ச்சியைச் சேர்ந்த பெண்ணிடம் தொடர்ந்து திட்டுவாங்கிக்கொண்டிருக்கிறான்.

நந்து (வயது 8)[தொகு]

நந்து விருந்தாவனைச் சேர்ந்த முற்போக்கான பையன். அவன் ராதிகாவுடன் பாசமிகுந்த உறவு வைத்திருக்கிறான் என்பதோடு தேவுடனான அவளுடைய முதல் திருமணத்திற்கான சாட்சியாகவும் இருக்கிறான். அவன் இந்தத் தொடரின் அத்தியாயங்களில் அதிகம் தோன்றுவதில்லை.

நடிகர்கள்[தொகு]

  • ரூபினா திலாய்க் ... ராதிகா சாஸ்திரி/புரோகித்
  • அவினாஷ் சச்தேவ் ... தேவ் புரோகித்
  • பிரியங்கா மி்ஷ்ரா ... விஷாகா சாஸ்திரி
  • ராஜிவ் வர்மா ... பிரிஜ் மோகன் சாஸ்திரி
  • சம்தா சாகர் ... தேவ்கி சாஸ்திரி
  • கோபி தேசாய் ... அம்மா
  • சுரேந்திர பால் மிஸ்டர்.புரோகித்
  • பிரப்னா சின்ஹா ... வைஷாலி புரோகித்
  • ரீதா பாதுரி ... தாதி
  • ராஜீவ் குமார் ... விவேக் புரோகித்
  • கீர்த்தி கேல்கர் ... மிருணாளினி புரோகித்
  • ... பிர்ஜூ
  • சஞ்சய் பத்ரா ... சுஷில் புரோகித்
  • ராஜ் லகானி ... அர்ஜூன் புரோகித்
  • ஸ்நேகல் சகாய் ... தீபிகா புரோகித்
  • சஷாங் சேத்தி ... கேஷவ் சௌபே
  • தர்ஷன் கந்தாஸ் ... புரப்
  • ... நந்து

வெளிப்புற இணைப்புகள்[தொகு]