சிந்தாதிரிப்பேட்டை
சிந்தாதிரிப்பேட்டை சின்ன தறிப்பேட்டை | |
---|---|
அக்கம் பக்கம் | |
ஆள்கூறுகள்: 13°4′N 80°16′E / 13.067°N 80.267°Eஆள்கூறுகள்: 13°4′N 80°16′E / 13.067°N 80.267°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
Metro | சென்னை |
Zone | 05 |
Ward | 62 |
அரசு | |
• நிர்வாகம் | விரிவான சென்னை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே (ஒசநே+5:30) |
இணையதளம் | www |
சிந்தாதிரிப்பேட்டை சென்னையின் மையப்பகுதியாகும். இந்தப் பகுதியில் சொற்பமான அளவில் நெசவாளர்கள் வசித்து வந்தனர். தறி கொண்டு நெசவு தொழில் செய்து வந்த இப்பகுதி சின்ன தறிப்பேட்டை (தறி- நெசவு செய்யப் பயன்படும் கருவி) என்று அழைக்கப்பட்டு வந்தது. அதுவே பேச்சு வழக்கில் மறுவி சிந்தாதிரிப்பேட்டை ஆகிவிட்டது.
பூங்கா[தொகு]
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்கா 14.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முதலில் இப்பூங்கா நேப்பியர் பூங்கா என்று அழைக்கப்பட்டது. இப்பூங்காவில் மே தினத்தன்று சிறப்பு மேடைப் பேச்சுக்கள் இடம் பெறும். மே தினப் பூங்கா செப்டம்பர் 13, 1950இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Amirthalingam, M. "Parks of Chennai". Envis Centre on Conservation of Ecological Heritage and Sacred Sites of India. CPREEC. 3 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 Feb 2012 அன்று பார்க்கப்பட்டது.