சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் (நூல்)
தோற்றம்
| சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் | |
|---|---|
| நூல் பெயர்: | சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் |
| ஆசிரியர்(கள்): | சண்முகம் சிவலிங்கம் |
| வகை: | கவிதை |
| துறை: | இலக்கியம் |
| காலம்: | 2010 |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 232 |
| பதிப்பகர்: | காலச்சுவடு |
| பதிப்பு: | முதல் பதிப்பு சூலை 2010 |
| ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் ஈழத்தின் முதுபெருங் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் எழுதிய கவிதை நூல் ஆகும். காலச்சுவடு பதிப்பகமும், இலண்டன் தமிழியல் நிறுவனமும் இணைந்து இதை வெளியிட்டுள்ளன. பத்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் 123 கவிதைகள் அடங்கியுள்ளன. இறுதியில் ஒரு பின்னிணைப்பு கவிதையும் உள்ளது. கவிஞரின் முதல் தொகுப்பான நீர்வளையங்கள் போலவே இந்நூலிலுள்ள பெரும்பாலான கவிதைகளும் தன்னிலைக் கவிதைகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.