சிங்காரி சியாம் சுந்தர் கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசராஜ மௌடமணி ஆதிகுரு
சிங்காரி சியாம் சுந்தர் கர்
இயற்பெயர்ସିଂହାରୀ ଶ୍ୟାମସୁନ୍ଦର କର
இயற்பெயர்சிங்காரி சியாம் சுந்தர் கர்
பிறப்பு(1908-03-04)4 மார்ச்சு 1908
புரி, ஒடிசா
இறப்பு13 மார்ச்சு 1975(1975-03-13) (அகவை 66)
இசை வடிவங்கள்ஒடிய இசை
தொழில்கள்ஒடிய இசை குரு, பாடகர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர்
Awards: ஒடிசா சங்கீத நாடக அகாதமி விருது 1972-73

சிங்காரி சியாம் சுந்தர் கர் ( Singhari Shyamsundar Kar ) (4 மார்ச் 1908 - 16 மார்ச் 1975) ஒரு புகழ்பெற்ற ஒடிசி இசைக்கலைஞரும், குருவும், பாடகரும், அறிஞரும், இசையமைப்பாளரும் ஆவார். புரி ஜெகன்நாதர் கோயிலுக்கு சேவை செய்யும் குடும்பத்தில் பிறந்த இவர், கோவில் பாரம்பரியத்தின் மூத்த குருக்களின் கீழ் வளர்க்கப்பட்டார். விரைவில் 20-ஆம் நூற்றாண்டில் ஒடிசி பாரம்பரிய இசையின் உயர்ந்த குருக்களில் ஒருவராக உயர்ந்தார். இவரது சக்திவாய்ந்த குரல் சிக்கலான பாணி, மர்தலா மீதான ஆளுமை மற்றும் ஒடிசி இசைக் கல்வியின் கல்வி நிறுவனமயமாக்கலுக்கான தனது பங்களிப்பு ஆகியவற்றிற்காக மிகவும் பிரபலமானவர். இவரது காலத்தில் ஒடிசி இசை, மர்தலா மற்றும் ஒடிசி நடனம் ஆகியவற்றில் பெரும்பாலான கலைஞர்கள் சிங்காரியின் தாக்கம் மற்றும் அறிவின் கீழ் வந்ததாக ஒப்புக்கொள்கிறார்கள். இவர் 16 மார்ச் 1975 அன்று இறந்தார்.[1][2]

வரலாறு[தொகு]

புரி நகரத்தின் மணிகர்னிகா என்னுமிடத்தில் தந்தை கோபிந்த சந்திர காரா மற்றும் தாயார் பத்மாவதி தேவி ஆகியோருக்குப் பிறந்த இவர், சிறுவயதிலிருந்தே இசையால் ஈர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவருக்கு இவரது தாயார் இசையில் ஈடுபடுத்தத் தொடங்கி பாரம்பரிய ஒடிசி பாடல்களைக் கற்றுக் கொடுத்தார்.[3] பாரம்பரிய இசை நாடகங்களைப் பார்த்துக்கொண்டே பல இரவுகள் விழித்திருப்பார். புரியில் உள்ள காளிகாப் பள்ளியின் மூத்த இசைக்கலைஞர்களான குரு அரிகர ராயகுரு, குரு காடி ஜகன்நாத பிரதிகாரி, குரு கல்பதரு நாயகா, குரு சிந்தாமணி மிசுரா, குரு மனகோவிந்த மகந்தி (பிரபலமாக அறியப்பட்டவர்) ஆகியோரிடமிருந்து ஒடிசி குரல் இசை மற்றும் மர்தலா ஆகிய இரண்டிலும் தனது ஆரம்பப் பயிற்சியைத் தொடங்கினார். [4][1][2] இவர் சமசுகிருதத்தில் தனது கல்வியை முடித்தார். ஜெகன்நாதர் கோயிலில் பரம்பரை சிங்காரி செபயதாவாக (சேவையாளராக) பணியாற்றினார். [3]

வானொலிக் கலைஞர்[தொகு]

கொல்கத்தாவின் அனைத்திந்திய வானொலியில் (ஒடிசாவில் வானொலி நிலையம் தொடங்கப்படவில்லை) ஒடிசி இசையின் வழக்கமான கலைஞராக இருந்தார். பின்னர் கட்டக் வானொலிநிலையத்திலும் அடிக்கடி ஒடிசி பாடல்கள், சந்தா, சம்பு, பஜனை & ஜனனா போன்றவற்றை பாடினார். 1954 ஆம் ஆண்டில், புது தில்லி செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்திந்திய இசை விழாவின் ஒரு பகுதியாக ஒடிசி குரல் இசை மற்றும் மர்தலா பாராயணம் ஆகிய இரண்டையும் நிகழ்த்தினார்.

இவர் தனது சிக்கலான பயிற்சி முறைக்காக அறியப்பட்டார். ஒடிசி இசையின் 65 லட்சணங்களை வலியுறுத்தினார். இவரது விவரிப்பும் கற்பித்தல் முறையும், ஒடிசி பாரம்பரியத்தின் 32 மூத்த குருக்களில் இவரை வைத்தது.

இவர் புவனேசுவரத்திலுள்ள உத்கல் சங்கீத மகாவித்யாலயாவில் ஒடிசி பாடலின் விரிவுரையாளராகவும் துறைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். பூரி நகரத்தின் பழங்கால சமூகக் கூடங்களில் இடங்களில் மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்தார். தனது புரி வீட்டில், "சியாமசுந்தர சங்கீத வித்யாலயா" என்ற இசைப்பள்ளியை நிறுவினார், இது ஒடிசி குரலிசை மற்றும் மர்தலாவில் தொடர்ந்து கல்வியை வழங்குகிறது.[2]

விருதுகள்[தொகு]

இவரது முயற்சிகளுக்காக, 1972-73க்கான ஒடிசா சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார்.[2] இவர் 16 மார்ச் 1975 இல் இறந்தார் (சில பதிவுகளின்படி மார்ச் 13).

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Ramhari Das (2015) (in or). Sangeet Sangya (4th ). Badahata, Biragobindapur, Sakhigopal, Puri. 
  2. 2.0 2.1 2.2 2.3 Saileswar Nanda (1992) (in or). Sambardhita Silpi Parichaya. Bhubaneswar, Odisha: Odisha Sangeet Natak Akademi. 
  3. 3.0 3.1 Singhari Damodar Kar (2002). "Odisi Sarasija". in Kar, Singhari Damodar (in or). Singhari Smarane. Puri, Odisha, India: Shyamsundar Sangeet Mahavidyalaya Puri. பக். 23. 
  4. Kar, Singhari Damodar, தொகுப்பாசிரியர் (2008) (in or). Odisi Sangita O Badya Parampara : Papers presented in the State Level Seminar on 30th April 2008 (Centenary Publication). Puri, Odisha: Shyamsundar Sangeet Mahabidyalaya, Puri.