உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்களத் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்களத் தீவு
பாம்பன் தீவும் அதன் தெற்கில் உள்ள சிங்களத் தீவும்
புவியியல்
பரப்பளவு0.1312 km2 (0.0507 sq mi)
நிர்வாகம்
இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
வட்டம்இராமேசுவரம்

சிங்களத் தீவு[1] (Shingle Island) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஓர் தீவாகும்.[2] மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும்.[3]

இது மண்டபம் பேரூராட்சியிலிருந்து 13. கி.மீ தொலைவிலும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 125 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

ஒரு காலத்தில் இத்தீவை சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்கும் தளமாகப் பயன்படுத்தினர். எனவே இது சிங்களத் தீவு என்ற பெயரைப் பெற்றது. இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தீவானது அதன் கூழாங்கல் கடற்கரைக்கு பிரபலமானது. இதன் கடற்கரையில் கூழாங்கற்கள் 0.2 முதல் 20 செ.மீ வரையிலான அளவுகளில் கணப்படுகின்றன. இதன் கடற்கரை அதன் செங்குத்தான நிலை காரணமாக சுற்றுலாவுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் அதன் தனித்துவமான அம்சங்களால் பல அருகிய உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. சோமலெ, இராமநாதபுரம் மாவட்டம், 1972, பக்கம் 299,
  2. DIN (2024-01-26). "ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்". Dinamani. Retrieved 2025-01-20.
  3. Shingle Tivu / Shingle Island
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்களத்_தீவு&oldid=4271482" இலிருந்து மீள்விக்கப்பட்டது