சிங்கப்பூர் தமிழ் இதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ்களின் பட்டியலைத் தொகுக்கிறது.

பேனா முனை[தொகு]

பேனா முனை, 1946ம் ஆண்டு, சிங்கப்பூரில் இருந்து மாதம் இரு முறை வெளிவந்த ஒரு இசுலாமிய சிற்றிதழாகும். இதன் ஆசிரியர் பஹ்ருத்தீன் ஆவார். இவ்விதழ், இசுலாமிய இலக்கியச் செய்திகளையும் இசுலாமிய உலக செய்தி விமரிசனங்களையும் இசுலாமிய அறிவியல் ஆக்கங்களையும் உள்ளடக்கியிருந்தது.