சா. மு. நாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சா. மு. நாசர் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சராவாரும். திமுகவைச் சேர்ந்தவரான சா.மு. நாசர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக சட்டமன்றத்துக்கு தி.மு.க. சார்பில் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாஃபா பாண்டியராஜனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார்.[1] இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக பால்வளத் துறை (பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி) அமைச்சசராக பதவியேற்றார்.[2] இவர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?, toptamilnews.com, 2021 மே, 6
  2. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  3. "திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் பங்கேற்பு, [[தமிழ் முரசு (இதழ்)|தமிழ் முரசு]]2019 ஏப்ரல் 24". 2021-05-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-08 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._மு._நாசர்&oldid=3553268" இருந்து மீள்விக்கப்பட்டது