சா. கணேசன் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சா. கணேசன் (S. A. Ganesan பிறப்பு: 21 செப்டம்பர் 1930 - 12 ஏப்ரல் 2018) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1970 முதல் 1971 வரை சென்னை மாநகராட்சியின் நகரத்தந்தையாக சேவை செய்தார்.  இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியைச் சேர்ந்தவர்.[1]

வாழ்க்கை[தொகு]

சா. கணேசன் துவக்கத்தில் பக்கிங்ஹாம் கர்னாட்டிக் ஆலையின் (பி அண்ட் சி ஆலை) பாரிமுனை அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றினார். அப்போது தி. நகர் வட்டாரத்தில் இருந்து 1959, 1964, 1968 ஆகிய ஆண்டுகளில் 3 முறை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதன்பின் 1970 முதல் 1971 வரை சென்னை மேயராக இருந்தார். 1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ghosh, Bishwanath (4 May 2011). "In search of 7, Coral Merchant Street". The Hindu. http://www.thehindu.com/arts/history-and-culture/article1990846.ece?css=print. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (15 ஏப்ரல் 2018). "திராவிடம், பொதுவுடைமை, காந்தியத்தை உள்ளடக்கியவர் சா.கணேசன்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
முன்னர்
வி. பாலசுந்தரம்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1970-1971
பின்னர்
காமாட்சி ஜெயராமன்

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._கணேசன்_(அரசியல்வாதி)&oldid=3577160" இலிருந்து மீள்விக்கப்பட்டது