சாலைஅகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலைஅகரம்
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சாலைஅகரம் (Salaiagaram) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள சாலைஅகரம் ஊராட்சியிலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்[4]. இவ்வூர் விழுப்புரம்-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. சாலைக்கு வெகு அருகிலேயே இக்கிராமம் அமைந்திருப்பதால்தான் சாலைஅகரம் என்று அழைக்கப்படுகிறது. அருகில் உள்ள தேவநாதசாமி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளும் சாலைஅகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளே ஆகும்.

கல்வி[தொகு]

இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியொன்று அமைந்துள்ளது.

கோயில்கள்[தொகு]

சாலைஅகரத்தில் கெங்கையம்மன் கோவில், பிள்ளையார் கோவில், முருகன் கோவில், காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறும். காளியம்மன் கோவில் அருகில் மிகப்பெரிய குளம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலைஅகரம்&oldid=3553584" இலிருந்து மீள்விக்கப்பட்டது