சாயிலேசு தாபா சேத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவல்துறை பொது ஆய்வாளர்
சாயிலேசு தாபா சேத்ரி
ShaileshThapaChhetri
शैलेशथापाक्षेत्री
28 ஆவது காவல்துறை பொது ஆய்வாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 சூலை 2020
குடியரசுத் தலைவர்வித்யா தேவி பண்டாரி
பிரதமர்கட்க பிரசாத் சர்மா ஒளி
செர் பகதூர் தேவ்பா
Vice Presidentநந்தா கிசோர் பன்
முன்னையவர்தாக்கூர் பிரசாத் கியாவாலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 8, 1968 (1968-12-08) (அகவை 55)
பக்தபூர்
குடியுரிமைநேபாளி
தேசியம்நேபாளி
கல்விஅரசறிவியல் பாடத்தில் முதுநிலை
வேலைகாவல் அதிகாரி

சாயிலேசு தாபா சேத்ரி (ShaileshThapaChhetri) நேபாள காவல்துறையின் 28 ஆவது மற்றும் தற்போதைய காவல்துறை பொது ஆய்வாளர் ஆவார். நேபாள அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 ஆம் தேதியன்று தாக்கூர் பிரசாத் கியாவாலிக்குப் பிறகு இவர் நேபாள காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1][2] 1992 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்றுதான் நேபாள காவல்துறையில் ஆய்வாளராக சாயிலேசு சேர்ந்தார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த தேசிய சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றிய ஒட்டுமொத்த நிலைமை தொடர்பான மத்திய பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் சாயிலேசு தாபா சேத்ரி கலந்துகொண்டார்.[3][4] 21 நவம்பர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று துருக்கியில் நடந்த பன்னாட்டுக் காவல் துறை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயிலேசு_தாபா_சேத்ரி&oldid=3919480" இலிருந்து மீள்விக்கப்பட்டது