சாமராயபட்டி
சாமராயபட்டி Samarayappatti | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°30′N 77°19′E / 10.500°N 77.317°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
மொழிகள் | |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 642204[1] |
தொலைபேசி குறியீடு | 04652 |
அருகில் உள்ள நகரம் | உடுமலைப்பேட்டை |
சாமராயபட்டி தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் தென் கோடியில் உள்ள மடத்துக்குளம் வட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வயல் வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.
முதன்மைத் தொழில்கள்[தொகு]
இங்குள்ள மக்களுக்கு முதன்மைத் தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், கரும்பு, வாழை, தென்னை போன்றவை முதன்மைப் பயிர்களாக இருக்கின்றன.
அமைவிடம்[தொகு]
இவ்வூர் மடத்துக்குளத்தில் இருந்து தெற்கே 8 கி.மீ தொலைவிலும் உடுமலையில் இருந்து கிழக்கே 12 கி.மீ தொலைவிலும் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து மேற்கே 24 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. புவியியல் ரீதியான அமைவிடம் 10°30'0" வடக்கு 77°19'52" கிழக்கு ஆக உள்ளது.[2]
தபால் நிலையம்[தொகு]
சாமராயபட்டியில் ஒரு துணை தபால் நிலையம் உள்ளது. இதன் குறியீடு எண் 642204 ஆகும்.[1]
அருகிலுள்ள இடங்கள்[தொகு]
திருமூர்த்தி அணை, அமராவதி அணை, அமணலிங்கேசுவரர் ஆலயம், தாண்டேசுவரர் ஆலயம், காசி விசுவநாதர் ஆலயம், பழனி முருகன் கோவில் போன்ற புகழ் மிக்க வழிபாட்டு மற்றும் சுற்றுலாத் தலங்கள் இவ்வூரின் அருகில் உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "இந்தியாமாப்பியா இணையத்தளம்". India Mapia. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2017.
- ↑ "Samarayapatti". wikimapia. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2017.