சாந்தவேரி கோபால கௌடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தவேரி கோபால கௌடா
பிறப்பு14 மார்ச் 1923
அரகா, தீர்த்தஹள்ளி, கருநாடகம்
இறப்பு9 சூன் 1972(1972-06-09) (அகவை 49)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுகருநாடகாவில் சோசலில இயக்கம்

சாந்தவேரி கோபால கௌடா (Shantaveri Gopala Gowda) (14 மார்ச் 1923 - 9 சூன் 1972) இவர் 1952, 1962, 1967 ஆம் ஆண்டுகளில் கர்நாடக சட்டசபையான கர்நாடக சட்டசபைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சோசலிச அரசியல்வாதி ஆவார். [1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இவர், கருநாடகாவின் சாகராவில் பிறந்தார். இவர் இந்தியாவின் மிக முக்கியமான சோசலிச தலைவர்களில் ஒருவராகவும், கருநாடகாவில் சோசலிசத்தின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். [2] இவர் ராம் மனோகர் லோகியா மூலம் ஈர்க்கப்ப்ட்டார். இவரது தலைமை 1951ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. இவர் "கவர்ந்திழுப்பவராகக்" கருதப்பட்டார். மேலும் இவர் "பல பின்தொடர்பவர்களையும்" பெற்றார். [3]

முதலமைச்சர்களுடனான தொடர்பு[தொகு]

இவர், கருநாடகாவின் முதலமைச்சர்களான ஜே. ஹெச். படேல், [4] பங்காரப்பா, சோ. ம. கிருசுணா தேவராஜ் அர்சு உள்ளிட்ட பல சோசலிசவாதிகளுக்கு வழிகாட்டினார்.

இவரது வாழ்க்கை வரலாறு வெளியானதும், கர்நாடக முதலமைச்சர் தரம்சிங், "மறைந்த சாந்தவேரி கோபால கௌடாவின் கிளர்ச்சியும் அரசியல் பங்களிப்பும் சட்டமன்ற வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை" என்று கூறினார். [5]

அரசியல்வாதி[தொகு]

இவர் நிலத்தின் கலாச்சாரத்தை அறிந்த ஒரு முன்னணி அரசியல்வாதியாக இருந்தார். மேலும் ஒரு கிராமவாசியாக இருப்பது கர்நாடகாவின் உழவர் சமூகத்தினரிடையே பெரும் பின்தொடர்பைக் கொண்டிருந்தது. கன்னட மொழியின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு நன்கு படித்த நபரான இவர், கர்நாடகாவின் பல அறிவார்ந்த மற்றும் உணர்திறன் வாய்ந்த இலக்கிய பிரமுகர்களில் கவிஞர் கோபாலகிருஷ்ணா அடிகா, புதின ஆசிரியர் டாக்டர் யு.ஆர்.அனந்தமூர்த்தி, எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பி. இலங்கேசு, விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.டி.நஞ்சுண்டசாமி போன்றோருடன் நட்புடன் இருந்தார். டாக்டர் அனந்தமூர்த்தி இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அவஸ்தே ("வாழ்க்கை நிலை") எனா நூலை எழுதினார். நடிகர் அனந்த் நாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, இது ஒரு முக்கியமான படமாகவும் உருவாக்கப்பட்டது. ஒரு உண்மையான இலட்சியவாதியும், தைரியமான தலைவருமான இவரது 'ககோடு சத்தியாக்கிரகம்' - கர்நாடக விவசாயிகளுக்கு நீதி வழங்க இவர் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம் - கர்நாடக மக்களின் மனதில் பசுமையாக் இருக்கிறது. சிறு வயதிலேயே ஏற்பட்ட இவரது மரணம் கர்நாடகாவில் சோசலிச இயக்கத்தின் மெதுவான அழிவைக் குறித்தது. தான் நினைத்தபடி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற சில தலைவர்களில் எம்.டி.நஞ்சுண்டசாமி ஒருவராக இருந்தார். விவசாயிகளின் அவலநிலை குறித்து மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்ததால் இவரது அரசியல் பங்கு முக்கியமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Araga Jnanendra set to do a hat trick?". தி இந்து (சென்னை). 23 April 2004 இம் மூலத்தில் இருந்து 29 ஜூலை 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040729084804/http://www.hindu.com/2004/04/23/stories/2004042308960500.htm. பார்த்த நாள்: 7 April 2013. 
  2. "Bangarappa pulls a favourite son act". 1992. https://books.google.com/books?id=F2ZDAAAAYAAJ&q=%22Shantaveri+Gopala+Gowda%22&dq=%22Shantaveri+Gopala+Gowda%22&hl=en&sa=X&ei=GWtfUavnB8iaiAK2_oGIDQ&ved=0CE4Q6AEwBw. 
  3. Naik, Murahari D. (1989). Agrarian Unrest in Karnataka. Volume 4 of Sociological Publications in Honour of K. Ishwaran. புது தில்லி: Reliance Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185047454. https://books.google.com/books?id=r_7sAAAAMAAJ&q=%22Shantaveri+Gopala+Gowda%22&dq=%22Shantaveri+Gopala+Gowda%22&hl=en&sa=X&ei=GWtfUavnB8iaiAK2_oGIDQ&ved=0CEUQ6AEwBQ. 
  4. "Patel was a flamboyant politician known for sharp wit". இந்தியன் எக்சுபிரசு (Mumbai). 13 December 2000. http://www.indianexpress.com/Storyold/166849/. பார்த்த நாள்: 7 April 2013. 
  5. "Books on three parliamentarians released". தி இந்து (சென்னை). 2 January 2005 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050216193120/http://www.hindu.com/2005/01/02/stories/2005010201490500.htm. பார்த்த நாள்: 7 April 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தவேரி_கோபால_கௌடா&oldid=3792628" இலிருந்து மீள்விக்கப்பட்டது