சாதனா மகிளா சங்கம்
அமைப்பின் ஒருவர் நாரி சக்தி விருது பெறுகிறார். | |
| உருவாக்கம் | 2011 |
|---|---|
| தலைமையகம் |
|
பொது செயலாளர் | கீதா. எம்[1] |
| விருது(கள்) | நாரி சக்தி விருது |
சாதனா மகிளா சங்கம் (Sadhana Mahila Sangha) பெங்களூரில் அமைந்துள்ளா ஒரு அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இது பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று நோயின் போது அவர்களால் வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாத பாலியல் தொழிலாளர்களை இவ்வமைப்பு ஆதரித்தது.
வரலாறு
[தொகு]பாலியல் தொழிலாளர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுகிறார்கள், தவறாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்காக இந்த அமைப்பு 2011இல் உருவாக்கப்பட்டு, 2013இல் பதிவு செய்யப்பட்டது.[2] இத் தொழில் சட்டவிரோதமானது என 2009 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, தங்கள் வேலையை மாற்ற விரும்பும் தொழிலாளர்களுக்கும் இந்த அமைப்பு உதவுகிறது. ஆனால் இத்தொழிலாளர்கள் தொடர்ந்து பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். அவர்களில் பலர் ஏற்கனவே தங்கள் கணவன் மற்றும் குடும்பங்களை இழந்துவிட்டனர். சாதாரண காலங்களில் கூட எச்.ஐ.வி போன்ற ஆபத்துகளுக்கு மேல் அவர்கள் உளவியல் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இந்த நிறுவனம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனையை ஏற்பாடு செய்கிறது. பின்னர் அவர்களுக்கு நோய் தொறு இருந்தால் அவர்களுக்கு ஆலோசனை அளிக்கிறது. ஆணுறைகளைப் பயன்படுத்தும்படி அவர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள். அவ்வாறு செய்யாததன் தார்மீக சிக்கல்களை அவர்களை உணர வைக்கின்றது. சிலர் நோய் தொற்று காரணமாக பாலியல் தொழிலை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தங்களை வீடற்றவர்களாகக் காண்கிறார்கள். இரண்டு சந்தர்ப்பங்களிலும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த பெண்களுக்கு ஆதரவை வழங்குகிறது.[3]
கொரோனா வைரஸின் சர்வதேச பரவல்
[தொகு]மார்ச் 2020 க்குள் பாலியல் தொழிலாளர்கள் கஷ்டங்களை தெரிவித்தனர். வெளியே வசிக்கிறார்கள். இவர்களால் தங்களுக்கு தங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என வாடிக்கையாளர்கள் அஞ்சினர் இதனால் இவர்கள் தங்கள் வருவாயை இழந்து பட்டினி கிடக்க ஆரம்பித்தனர். பெங்களூரில் மட்டும் 1,000 பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.[4] இந்தத் தொண்டு நிறுவனம் இவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.
விருதுகள்
[தொகு]இவர்களின் இப்பணிக்காக 2017 அனைத்துலக பெண்கள் நாள் அன்று புதுதில்லியின் குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி நாரி சக்தி விருது வழங்கி முழு அமைப்பையும் கௌரவித்தார்.[5] இந்த விருதுடன் குழுவுக்கு ஒரு சான்றும், ஒரு லட்சம் ரூபாயும் கிடைத்தது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sex workers stare at bleak future". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-05-15. Retrieved 2021-01-23.
- ↑ Reddy, Y. Maheswara (2020-03-24). "Fear of coronavirus keeps clients away". Bangalore Mirror (in ஆங்கிலம்). Retrieved 2021-01-23.
- ↑ "Chigurida Badaku: Sadhana Mahila Sangha Works To Protect HIV+ Sex Workers From Endless Cycles of Harassment". Radio Active CR 90.4 MHz (in ஆங்கிலம்). 2019-03-13. Archived from the original on 2021-01-24. Retrieved 2021-01-23.
- ↑ Reddy, Y. Maheswara (2020-03-24). "Fear of coronavirus keeps clients away". Bangalore Mirror (in ஆங்கிலம்). Retrieved 2021-01-23.Reddy, Y. Maheswara (2020-03-24).
- ↑ "Nari Shakti Awardees- Sadhana Mahila Sangha, Karnataka | Ministry of Women & Child Development". wcd.nic.in. Retrieved 2021-01-23.
- ↑ Service, Tribune News. "Prez honours 31 with Nari Shakti Puraskar on Women's Day". Tribuneindia News Service (in ஆங்கிலம்). Retrieved 2021-01-23.