சாகர்புடா
சகர்புடா (Sakharpuda) என்பது மராத்தியர் சமூகத்தினர் கடைபிடிக்கும் திருமண நிச்சயதார்த்த விழாவாகும். இவ்விழா வாங்னிச்சாய் (vāṅaniścaya) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் வாய்மொழி ஒப்பந்தம்.[1][2] சாகார் என்றால் சர்க்கரை என்றும், பூடா என்றால் பை அல்லது பெட்டி என்றும் பொருள்.
சகர்புடா சடங்கு என்பது மராத்தி கலாச்சாரத்தில் திருமணத்திற்கு முந்தைய பாரம்பரிய சடங்கு ஆகும். இச்சடங்கின் போது மணமக்களின் குடும்பங்களின் சம்மதம் அல்லது புனித மஹுரத்தின் படி நடத்தப்படும் நிச்சயதார்த்த விழாவாகும். திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகள் குடும்பங்களுக்கு இடையே நடக்கும் முதல் முறையான பரிமாற்ற நிகழ்வு இதுவாகும்.[3]
திருமணத்திற்கு முந்தைய சடங்கான சகார்புடாவில், மணமகனின் பெற்றோர் மணமகளுக்கு ஒரு பையில் சர்க்கரையைக் கொடுப்பார்கள். மணமகளின் பெற்றோர் மணமகனுக்கு ஒரு தேங்காயினையும் நாணயங்களையும் கொடுப்பார்கள். இது பெற்றோர் இருவரும் தங்கள் குழந்தைகளைத் திருமணம் செய்து வைப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்வதைக் குறிக்கிறது. மணமகனின் பெற்றோர் மணமகளுக்கு ஒரு புடவையைப் பரிசாக வழங்குவார்கள். இது மணமகனின் குடும்பம், அவளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. மணப்பெண்ணின் கைகள் பச்சை வளையல்களால் அலங்கரிக்கப்படும். மேலும் சில இணைகள் மோதிரங்களையும் மாற்றிக் கொள்கிறார்கள். பாரம்பரியமாகக் குடும்பங்கள் திருமண அழைப்பிதழ்களை அச்சிட்டு அனுப்புவதற்கு, சகார் புடா முடியும் வரை காத்திருக்கிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gupte, Balkrishna Atmaram (1911). A Prabhu Marriage: Customary and Religious Ceremonies Performed in the Marriage of a Member of the Chāndraseni Kāyasth Prabhus of Bombay. With a Chapter on Some Curiosities of Marriage Customs in India (in ஆங்கிலம்). Superintendent government printing, India. p. 15.
- ↑ "वाङनिश्चय - Meaning in English - वाङनिश्चय Translation in English". SHABDKOSH (in ஆங்கிலம்).
- ↑ "Marathi Sakharpuda Ceremony: A Complete Guide to Engagement Rituals and Traditions". www.weddingwire.in (in Indian English). 2025-03-12. Retrieved 2025-03-12.