சர்தாரா சிங் ஜோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்தாரா சிங் ஜோல் (Sardara Singh Johl) (பிறப்பு 1928) இவர் ஒரு இந்திய விவசாய பொருளாதார நிபுணரும்,[1] எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் முதல்வருமாவார்.[2][3] இந்திய வேளாண் ஆராய்ச்சி அமைப்பின் வேளாண் பொருளாதாரத்தின் முன்னாள் தேசிய பேராசிரியரான இவர் பஞ்சாபி பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இந்திய அரசு அமைத்த விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் தலைவராக இருந்தார்.[4] இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய ஆளுநர் குழுவின் முன்னாள் இயக்குநராகவும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக வங்கி மற்றும் மேற்கு ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் போன்ற சர்வதேச அமைப்புகளின் முன்னாள் ஆலோசகராகவும் உள்ளார்]] .[5] வேளாண்மை மற்றும் வேளாண் கல்விக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசு மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூசண் இவருக்கு வழங்கியது.[6]

சுயசரிதை[தொகு]

சர்தாரா சிங் ஜோல் 1928 பிப்ரவரி 8 ஆம் தேதி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிரித்தானிய இந்தியாவில் பைசலாபாத்தில் (அன்றைய பாக்கித்தானில் இலாயல்பூர்) எஸ். பூட்டா சிங் என்பவருக்குப் பிறந்தார் [7] உள்ளூர் கிராம பள்ளியில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்தார்.[3] பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முறையே வேளாண்மை மற்றும் வேளாண் பொருளாதாரத்தில் அறிவியலில் இளங்கலை பட்டமும் மற்றும் முதுகலை பட்டமும் பெற்ற பிறகு, பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெறுவதற்காக தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் , 1952 இல் பஞ்சாபி பல்கலைக்கழக்த்திலிருந்து முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றார்.[8] அதே ஆண்டில் பஞ்சாபின் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக சேருவதற்கு முன்பு எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1965 இல் சமூகவியல் பேராசிரியர் மற்றும் பொருளாதாரத் துறைத் தலைவர் பதவியில் இருந்தார்.

ஜோல் பல குறிப்பிடத்தக்க கல்வி பதவிகளை வகித்தார்; இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்   பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அரியானா விவசாய பல்கலைக்கழகத்தின் முதல்வராக பணிபுரிந்தார். 2012 இல் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின், முதல் முதல்வரகராக இருந்தார்.[4] வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் தலைவராக உள்ள இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய ஆளுநர் குழுவிலும் இருக்கிறார்.[3] இவர் பஞ்சாப் மாநில திட்டமிடல் வாரியத்தின் துணைத் தலைவராகவும், ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பொருளியல் பள்ளியில் வருகை பேராசிரியராகவும் இருந்துள்ளார்.[9] பஞ்சாப் அரசாங்கத்தின் வேளாண் கொள்கை தொடர்பான ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த காலத்தில், மாநிலத்தின் கோதுமை மற்றும் நெல் விவசாயிகளுக்கு பயிர் சுழற்சி மற்றும் பல்வகைப்படுத்தலை முன்மொழிந்தார், மாற்று பயிர்களுக்கு மாறுவதற்கு விவசாய சமூகத்திற்கு மானியங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஜான் திட்டம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.[10] பஞ்சாப் அரசாங்கத்தின் நான்கு வெவ்வேறு மத்திய அரசுகளின் குத்தகைக் காலத்தில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், தமிழக அரசு, குஜராத் அரசு, இலங்கை அரசு, உணவு மற்றும் வேளாண் அமைப்பு, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் மேற்கு ஆசியாவிற்கான சமூக ஆணையத்தின் ஆலோசகராகவும் பணியாற்றினார். இவர் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் சங்கம், இந்திய வேளாண் பொருளாதார சங்கம், வேளாண் பொருளாதார ஆராய்ச்சி சங்கம், வேளாண் சந்தைப்படுத்தல் இந்திய சங்கம் மற்றும் பஞ்சாப் சாகித்திய அகாதமி ஆகியவற்றின் முன்னாள் தலைவரும் ஆவார். சமூக-அரசியல் கருத்துக்களில் குரல் கொடுப்பதற்காக அறியப்படுகிறார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Punjab Agriculture Summit a Farce". Yes Punjab. 17 February 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "FDI will benefit farmers". Indian Express. 2 November 2012. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  3. 3.0 3.1 3.2 "Our Chancellor". Central Agricultural University of Punjab. 2014. Archived from the original on 10 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Dr Johl named first Chancellor of Central University of Punjab". India Education Review. 14 September 2012. Archived from the original on 1 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Dr Sardara Singh Johl appointed Chancellor of Central University at Bathinda". Saanj News. 13 September 2012. Archived from the original on 1 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  7. "Member Profile Info". Punjabi University Alumni Association. 2016. Archived from the original on 10 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Grit, hard work won him Padma Bhushan". The Tribune. 24 January 2004. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  9. Mechanization, Labor-Use and Productivity in Agriculture. https://kb.osu.edu/dspace/bitstream/handle/1811/66834/CFAES_ESO_23.pdf?sequence=1. 
  10. "Punjab fights a losing battle on Johl plan". The Tribune. 11 August 2003. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தாரா_சிங்_ஜோல்&oldid=3929634" இலிருந்து மீள்விக்கப்பட்டது