உள்ளடக்கத்துக்குச் செல்

சரீரக உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரீரக உபநிடதம்
உடல் மற்றும் அதன் அமைப்புகள்
தேவநாகரிशरीरक or शारीरक
உபநிடத வகைசாமான்யம்
தொடர்பான வேதம்யசுர் வேதம்

சரீரக உபநிடதம் ( Sariraka Upanishad என்பது உபநிடதங்களில் சிறியதாகும். மேலும் இது இராமனால் அனுமனுக்கு உபதேசித்த முக்திகா உபநிடங்களில் 62 இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]) இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது.[2] [3] யசுர்வேதத்தைச் சேர்ந்த 32 உபநிடதங்களில் ஒன்றான இது சாமான்யம் (பொது), [4] என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல மாய உடலியல் உபநிடதங்களில் இதுவும் ஒன்றாகும்.[5][6]

மனித உடலுக்கும் மனித ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பு என்ன, ஒருவர் மற்றவருடன் எங்கே, எப்படி தொடர்பு கொள்கிறார், பிறப்பு மற்றும் இறப்புக்குப் பிறகு ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கிறது என்பதை கர்ப்ப உபநிடதத்துடன் சேர்த்து இது கவனம் செலுத்துகிறது.[7] இந்தக் கேள்விகள் மற்றும் பல்வேறு கோட்பாடுகள் இந்து மதத்தின் ஆரம்பகால உபநிடதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கோட்பாடுகள் உருவாகின்றன. ஆனால் சரீரகம் மற்றும் பிற மாய உடலியல் உபநிடதங்கள் இந்த விவாதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.[7] ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியலாளர் பால் தியூசென் பிற்காலத்தில் நூல்கள் திருத்தப்பட்டதாகவும், அவற்றின் சிதைந்த உள்ளடக்கம் அறியப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் முழுவதும் சீரற்றதாகவும் உள்ளது[7] என்றும் கூறுகிறார்.

மனித உடல் என்பது பூமி, நீர், காற்று, விண்வெளி மற்றும் ஆற்றல் ( நெருப்பு) ஆகியவற்றின் கலவையாகும் என்று உரை வலியுறுத்துகிறது. மேலும் ஜீவாத்மா , பரமாத்மா. இவற்றிலிருந்து மனித உணர்வு உறுப்புகள் எவ்வாறு உருவாகின்றன என்றும், மனிதனின் விருப்பம், சந்தேகம், நினைவாற்றல், புத்தி, பேச்சு, கோபம், பயம், மாயை, நன்னடத்தை, இரக்கம், அடக்கம், அகிம்சை, தர்மம் மற்றும் பிற அம்சங்கள் போன்ற வாழ்க்கையின் பிற செயல்பாடுகளை விவரிக்கிறது.[5] பிரகிருதி (எப்போதும் மாறும் இயல்பு) எட்டு பூர்வீக வடிவங்கள், பதினைந்து செயல்பாட்டு மாற்றங்கள், மொத்தம் இருபத்து மூன்று தத்துவங்களைக் கொண்டுள்ளது.[5]

சொற்பிறப்பியல்

[தொகு]

சரீரகம் என்ற வார்த்தையின் அர்த்தம் "உடல் மற்றும் அதன் பாகங்களின் அமைப்புடன் தொடர்புடையது". மேலும், "உடல் மற்றும் ஆன்மா பற்றிய கோட்பாடு" என்பதாகும்.[8] இந்த உரை சரீரகோபநிடதம் என்றும் அழைக்கப்படுகிறது.

கட்டமைப்பு

[தொகு]

உரை ஒரே ஒரு அத்தியாயத்தைக் கொண்டுள்ள. இது மனித உடலியல் கோட்பாட்டை முன்வைக்கும் நீண்ட உரைநடை முன்னுரையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து எட்டு வசனங்கள் இடம் பெற்றுள்ளன.[9] வசனங்கள் 1 முதல் 4, அதே போல் 6 முதல் 7தாகவும் உள்ளது. மேலும், குணங்கள் மற்றும் நான்கு உணர்வு நிலைகளின் கோட்பாட்டை முன்வைக்கிறது.[9] கடைசி வசனம் புருசனே உயர்ந்தவன் என்று கூறுகிறது.

சான்றுகள்

[தொகு]
  1. Deussen, Bedekar & Palsule (tr.) 1997, ப. 556.
  2. Ramamoorthy & Nome 2000.
  3. "Śārīraka-Upanishaḍ of Kṛshṇa-Yajurveḍa". Sacred Texts.com. Retrieved 24 October 2015.
  4. Tinoco 1997, ப. 87.
  5. 1 2 3 KN Aiyar, Thirty Minor Upanishads, University of Toronto Archives, இணையக் கணினி நூலக மையம் 248723242, pages vii, 113–115 Archive
  6. Alex Wayman (1982), Reviewed Work: Thirty Minor Upanishads, including the Yoga Upanishads by K. Narayansvami Aiyar, Philosophy East and West, Vol. 32, No. 3, pages 360–362
  7. 1 2 3 Paul Deussen (1966), The Philosophy of the Upanishads, Dover, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0486216164, pages 283–296
  8. śārīraka and śārīra, Sanskrit-English Dictionary, Koeln University, Germany
  9. 1 2 ॥ शारीरकोपनिषत् ॥ Sanskrit text of Shariraka Upanishad, SanskritDocuments Archives (2009)

உசாத்துணை

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரீரக_உபநிடதம்&oldid=4315962" இலிருந்து மீள்விக்கப்பட்டது