சரகர்

சரகர் (Charaka) பரத கண்டத்தில் பொ.ஊ.மு. 200க்கும் பொ.ஊ. 200க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மகரிஷி ஆவார். சரகர் ஆயுர்வேதத்தையும், ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர்.[1] இவர் இயற்றிய சரகர் சம்ஹிதை எனும் நூலில் இதயம், சுவாசம், ரத்தக்கொதிப்பு, பற்கள் போன்றவற்றின் நோய்களுக்கான சிகிச்சைமுறை, நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவு, உறக்கம், ஓய்வு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கூறுகிறது.[2]
இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Who is Maharishi Charaka
- ↑ Charaka-samhita
- ↑ குமுதம் ஜோதிடம்; 31.07.2009