சம்பந்த முனிவர் (பழுதை கட்டி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழுதை கட்டி சம்பந்த முனிவர் என்பவர் தரும்புர ஆதீன பரம்பரையில் வந்த ஒரு சைவப் பெரியார். இவரைக் காழி - பழுதை கட்டி சம்பந்த முதலியார் எனவும், பழுதை கட்டிச் சம்பந்த பண்டாரம் என்றும் குறிப்பிடுவர். இவர் வாழ்ந்த காலம் 1350-1375 எனக் கணிக்கப்பட்டுள்ளது. காழி என்பது சீர்காழி. இவரது ஆசிரியர் பழுதை கட்டிச் சிற்றம்பல நாடிகள்.

சிவானந்தமாலை முதலான நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005