சமற்கிருத ஆதிக்கம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமற்கிருத ஆதிக்கம் என்னும் இந்த நூல் முதன் முதல் 1985 ஆம் ஆண்டில் திராவிடர் கழக (இயக்க)ப் பதிப்பாக வெளிவந்தது. இரண்டாம் பதிப்பு 2014 திசம்பரில் வெளிவந்தது.

நூலின் வரலாறு[தொகு]

பெரியார் திறந்த பல்கலைக் கழகத்தின் சார்பில் 1985 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 9, 10 தேதிகளில் சமற்கிருத மயமாக்கப்பட்டமை என்னும் பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிஞர்கள் படித்த 22 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாக உருப்பெற்றது.

கட்டுரைகளும் ஆக்கியோரும்[தொகு]

  1. பண்பாடு சமற்கிருதமயமாக்கப்படுதல்--முனைவர் க. த. திருநாவுக்கரசு
  2. நமது பண்பாடு சமற்கிருதமயமாக்கப்பட்டமை--தி.வை. சொக்கப்பா
  3. தமிழ் முப்பால் மரபும் வடமொழி நாற்பால் மரபும்--முனைவர் தி.முருகரத்தனம்
  4. தமிழர் திருவிழாக்கள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை-திருக்கார்த்திகையும் தீபாவளியும்--முனைவர் தமிழண்ணல்
  5. சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம்--பெ.திருஞானசம்பந்தன்
  6. தமிழ்ச் சொற்கள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை-தமிழ் அரசு--முனைவர் தமிழண்ணல்
  7. கணக்கு வழக்கு எங்கே?--இராம.சுப்பிரமணியன்
  8. தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி --முனைவர் இரா. மாணிக்கவாசகம்
  9. தமிழ்மொழியில் வடசொற்கள் புகுந்தமை --முனைவர் சி. பாலசுப்பிரமணியன்
  10. சமுதாய வாழ்வில் வடமொழி மேலாண்மை--முனைவர் பொற்கோ
  11. இசை, ஆடற்கலைகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை--ப.தண்டபாணி
  12. இசையுலகில் வடமொழி ஆதிக்கம்--முனைவர் சேலம் எஸ் செயலட்சுமி
  13. சித்த மருத்துவத்தில் வடமொழிக் கலப்பு--முனைவர் ப.சிற்சபை
  14. சமயப் மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்--முனைவர் தெ. ஞானசுந்தரம்
  15. சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருதமயமாக்கப்பட்டமை --எஸ்.கெங்காதரன்
  16. தமிழர் சமய நெறிகள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை--மதுரை குரு மகாசன்னிதானம்
  17. வேத மொழியும் பேத மொழியும்--கரூர் பி.ஆர்.குப்புசாமி
  18. சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் --கு. வெ. கி. ஆசான்
  19. சமுதாய வாழ்க்கை சமற்கிருதமயமாக்கப்பட்டமை--தி.இராமதாஸ்
  20. சங்க அரசியல் சமற்கிருதமயமாதல் --திருமதி மீனாட்சி முருகரத்தனம்
  21. தமிழக வரலாற்றில் ஆரியம் விளைத்த அழிவுகள் --பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன்
  22. நில உரிமைகளில் சமற்கிருத வழக்கு--முனைவர் அ. இராமசாமி
  23. தந்தை பெரியார் கருத்தரங்க தொடக்க உரை--முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம்
  24. தலைமை உரை--நீதியரசர் பி.வேணுகோபால்
  25. முனைவர் மா. நன்னன் அறிமுகவுரை
  26. மானமிகு கி. வீரமணி வரவேற்புரை

சான்று[தொகு]