உள்ளடக்கத்துக்குச் செல்

சமரகரவீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமரகரவீரன்
Samaragrawira
Sri Maharaja Samaragrawira
Indra Raja Mataram
Rakai Warak Dyah Manara
Rakai Warak Dyah Watukura Lingganarottama Satyajayabhumi
சிறீவிஜயம்மாதரம் அரசர்
ஆட்சிக்காலம்800—819
முன்னையவர்தரணிந்திரன்
பின்னையவர்சமரதுங்கன்
(Samaratungga)
பெயர்கள்
சிறீ மகாராஜா ராக்காய் வாராக்
Lingganarottama Satyajayabhumi
சிறீவிஜய அரசர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
ஜெயநேசன் 671–702
இந்திரவருமன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–742
(தகவல் இல்லை) 742–775
பிற்காலம்
சைலேந்திர மரபு
(மாதரம் இராச்சியம்)
பனங்கரன் 746–784
பனராபன் 784–803
ஜாவா
பானு 752–775
தருமசேது (விஷ்ணு) 775–?
தரணிந்திரன் 775–782
சமரகரவீரன் 800–819
ராக்காய் வாராக் 803–827
தயா குலா 827–829
ராக்காய் காருங் 829–847
பிரமோதவர்தனி 847–856
ராக்காய் பிக்கத்தான் 838–850
லோகபாலா 855–885
தகவாசன் 885–885
பனுவங்க தேவேந்திரன் 885–887
தயா பத்திரன் 887–887
உதயாத்தியன் 960–980
இசியா சி 980–988
சூடாமணி வருமதேவன் 988–1008
விஜயோத்துங்கவருமன் 1008–1017
கடாரம்
சங்கராமன் 1017–1030
செரி தேவன் 1028–(?)
சோழர் ஆட்சி
இராசேந்திர சோழன் 1025–1044
குலோத்துங்கன் 1070–1120
மௌலி மரபு
திரிலோகிய ராஜா 1183–(?)

சமரகரவீரன் அல்லது ராக்காய் வாராக் (ஆங்கிலம்: Samaragrawira அல்லது Sri Maharaja Samaragrawira; இந்தோனேசியம்: Srī Mahārāja Rakai Warak அல்லது Rakai Warak Dyah Manara; அல்லது Rakai Warak Dyah Watukura Lingganarottama Satyajayabhumi; ஜாவானியம்: Sri Maharaja Rakai Warak) என்பவர் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் ஆட்சியாளர் ஆவார்.[1]:92

அதே வேளையில் மத்திய ஜாவாவில் இருந்த மாதரம் இராச்சியத்தின் அரசராகவும் பொறுப்பு வகித்தார். சமரகரவீரன், சைலேந்திர அரச மரபைச் சேர்ந்தவர் ஆவார்.

பொது

[தொகு]

மாதரம் இராச்சியத்தின் ஆளுமையின் கீழ் சிறீ விஜயப் பேரரசு அமையப் பெற்றதும், மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த அதே அரசர்கள் சிறீ விஜயப் பேரரசையும் ஒருசேர ஆட்சி செய்தனர். மந்தியாசி கல்வெட்டில் (907); (Mantyasih inscription) அதாவது மாதர இராச்சியத்தின் மன்னர்கள் பட்டியலைக் கொண்ட கல்வெட்டில் சமரகரவீரனின் பெயர் காணப்படுகிறது.

தரணிந்திரனின் வாரிசான சமரகரவீரன், 800—819-ஆம் ஆண்டுகளின் காலக்கட்டத்தில், சிறீ விஜயப் பேரரசை ஆட்சி செய்தார்.[2]

வரலாறு

[தொகு]

இந்தோனேசிய வரலாற்றாசிரியர் சிலாமெட் முல்ஜானா (Slamet Muljana) முன்வைத்த ஒரு கோட்பாடு; சமரகரவீரனின் அசல் பெயர் சமரக்ரவீரர் என்றும்; அவர் சிறீ விஜய மன்னர் பாலபுத்திர தேவாவின் (Balaputradewa) தந்தை என்றும் கூறுகிறது.

எனினும், நாளந்தா கல்வெட்டின்படி, பாலபுத்திரதேவா என்பவர், சோம வம்சத்தைச் சேர்ந்த தருமசேதுவின் மகள் தேவி தாராவுக்குப் (Tara Dharmasetu) பிறந்த சமரக்ரவீரரின் மகனாவார். பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் தருமசேது சிறீ விஜய இராச்சியத்தின் மன்னர் என்று நம்புகிறார்கள்.

உண்மையில், பாலபுத்திரதேவா தன் தாத்தாவிடம் இருந்து சுமாத்திரா தீவின் அரியணையைப் பெற்றார். இதுவே வரலாற்றாசிரியர் சிலாமெட் முல்ஜானாவின் கருத்தும் ஆகும். பாலபுத்திரதேவா தருமசேதுவிடம் இருந்து சிறீ விஜய அரியணையைப் பெறவில்லை; சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், பாலபுத்திரதேவா சிறீ விஜயத்தின் அரசராக முடிந்தது என்றும்; சிலாமெட் முல்ஜானா தம் கருத்தை முன்வைக்கிறார்.

மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்

[தொகு]
முன்னர் மாதரம் இராச்சியத்தின் மகாராஜா
சமரகரவீரன்
800—819
பின்னர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
  2. Slamet Muljana (2006). Sriwijaya. LKIS, Yogyakarta.

சான்றுகள்

[தொகு]
  • Marwati Poesponegoro & Nugroho Notosusanto. 1990. Sejarah Nasional Indonesia Jilid II. Jakarta: Balai Pustaka
  • Slamet Muljana. 2006. Sriwijaya (terbitan ulang 1960). Yogyakarta: LKIS
  • Ayatrohaedi. 2005. SUNDAKALA Cuplikan Sejarah Sunda Berdasarkan Naskah-naskah "Panitia Wangsakerta" Cirebon. Bandung: Pustaka Jaya

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமரகரவீரன்&oldid=4213402" இலிருந்து மீள்விக்கப்பட்டது