சனன கருவி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய ஞானாவரண விளக்கவுரையில் மேற்கோள் பாடல் குறிப்புடன் தெரியவரும் நூல் இந்த சனன கருவி மாலை (ஜனன கருவி மாலை). [1] இது கரு உருவாதல் பற்றிய அக்கால அறிவியல் கண்ணோட்டம்.

"மற்று விளக்கவுரையில் கூறியன எல்லாம் சனன கருவி மாலையுள் கண்டுகொள்க, ஈண்டு எழுதின் பெருகும் எனக் காட்டிற்றிலம்" - என வெள்ளியம்பலத் தம்பிரான் குறிப்பிடுவதால் இந்த நூலைப்பற்றி அறிய முடிகிறது.

பாடல் - எடுத்துக்காட்டு[தொகு]
அன்னை நுகர்ந்ததன் சாரம் பொழுது மூன்றின் ஆம் கருவின் இரதம் அதன் மலம் நீர் கிட்டம்
பின் இரதத்து உற்ற மலம் மயிரும் தோலும் பேசு திறத்து இறைச்சி இதன் மலங்களாம் தசையின்
துள்ளி இடும் மேதை மலப் பித்தம் மேதையினில் சூழ் என்பு மலம் நகமாம் என்பின் மச்சை
மன்னும் மலம் பீளை சுக்கிலத்தை மச்சை மலம் நெய்ப்புச் சுக்கிலம்-தான் வலி பலம் வாதமுமே
அடிக்குறிப்பு[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 284. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனன_கருவி_மாலை&oldid=1451547" இலிருந்து மீள்விக்கப்பட்டது