சந்தௌலி
சந்தௌலி
சந்தோலி | |
---|---|
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°16′N 83°16′E / 25.27°N 83.27°E | |
நாடி | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | சந்தௌலி மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,484.70 km2 (959.35 sq mi) |
ஏற்றம் | 70 m (230 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 23,020 |
• அடர்த்தி | 9.3/km2 (24/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• கூடுதல் மொழிகள் | உருது |
• வட்டார மொழி | போச்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 232104 |
வாகனப் பதிவு | UP-67 |
இணையதளம் | https://chandauli.nic.in/ |
சந்தௌலி (Chandauli), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த சந்தௌலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும் பேரூராட்சியும் ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கில் 360.4 கிலோ சந்தௌலி மக்களவைத் தொகுதிமீட்டர் தொலைவிலும்; வாரணாசிக்கு தெற்கே 42.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் சந்தௌலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
மக்கள் தொகைப் பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வார்டுகளும், 3,520 குடியிருப்புகளும் கொண்ட சந்தௌலி பேரூராட்சியின் மக்கள் தொகை 23,020 ஆகும். அதில் 11,931 ஆண்கள் மற்றும் 11,089 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.33% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.15% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 20.23% மற்றும் 2.01% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.16%, இசுலாமியர் 12.54% மற்றும் பிற சமயத்தினர் 0.29% வீதம் உள்ளனர்.[1] இந்நகர மக்கள் போச்புரி மொழி, இந்தி மொழி மற்றும் உருது பேசுகிறார்கள்.
போக்குவரத்து
[தொகு]நெடுஞ்சாலைகள்
[தொகு]தில்லி-கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 19 சந்தௌலி நகரம் வழியாகச் செல்கிறது..
தொடருந்து நிலையம்
[தொகு]தில்லி-கொல்கத்தா நகரங்களை இணைக்கும் இருப்புப்பாதை சந்தௌலி-மச்வார் தொடருந்து நிலையம்[2] வழியாகச் செல்கிறது.