சதுரங்கம் (இந்திய பாரம்பரிய விளையாட்டு)
சதுரங்கம் பண்டைய இந்தியாவில் விளையாடப்பட்ட ஒரு பலகை விளையாட்டு. இதுவே தற்காலத்தில் உலகம் முழுதும் பிரபலமாக விளையாடப்பட்டுவரும் "செஸ்" விளையாட்டின் முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இது இந்தியாவிலிருந்து பாரசீகம் வழியாக மேலை நாடுகளுக்குச் சென்றதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்விளையாட்டு குப்தர்களின் காலகட்டத்தில் பொதுவருடம் 6 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டின் சரியான விதிமுறைகள் தெரியவில்லை. பின்னர் இவ்விளையாட்டு பாரசீகம் வழியாக மத்திய ஐரோப்பாவை அடைந்து தற்காலத்திய சதுரங்க விளையாட்டாக உருப்பெற்றது.