க. கோபாலன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கஸ்தூரி கோபாலன் | |
---|---|
பிறப்பு | கோயம்புத்தூர், சென்னை மாகாணம் | 8 நவம்பர் 1890
இறப்பு | 9 திசம்பர் 1974 சென்னை, பிரித்தானிய இந்தியா | (அகவை 84)
பணி | வெளியீட்டாளர் |
வாழ்க்கைத் துணை | இரங்கநாயகி |
பிள்ளைகள் | கோ. நரசிம்மன், கோ. கஸ்தூரி |
கஸ்தூரி கோபாலன் (K. Gopalan) (8 நவம்பர் 1890 - 9 டிசம்பர் 1974) ஓர் இந்திய வெளியீட்டாளர் ஆவார். இவர் கஸ்தூரி & சன்ஸ் என்ற வெளியீட்டு நிறுவனத்தை நிறுவினார். இது தி இந்து என்ற பத்திரிக்கையை வெளியிடுகிறது.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கோபாலன், கோயம்புத்தூரில் 1890 நவம்பர் 8 ஆம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார் என்ற வழக்கறிஞருக்கு இளைய மகனாகப் பிறந்தார். கஸ்தூரி ரங்க ஐயங்கார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற வைணவ பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். கஸ்தூரி சீனிவாசன் இவரது அண்ணன்
தொழில்
[தொகு]சீனிவாசன், ஏ. இரங்கசாமி ஐயங்காரும் சீ. இரங்கசாமி ஐயங்காரும் தி இந்து பத்திரிக்கையை வெளியிடுவதில் ஈடுபட்டிருந்தாலும், கோபாலன் கஸ்தூரி அண்ட் சன்ஸ் விவகாரங்களை நிர்வகித்தார். இது செய்தித்தாள், ஸ்போர்ட் அன்ட் பாஸ்டைம், பிரண்ட்லைன், துடுப்பாட்ட ஆண்டு புத்தகம் போன்ற பத்திரிகைகளையும் வெளியிட்டது.
இறப்பு
[தொகு]ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக வெளியீட்டாளராக பணியாற்றிய கோபாலன் 1974 திசம்பரில் தனது 84 வயதில் இறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கோபாலன் இரங்கநாயகி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் தி இந்து குழுமத்தில் பணியாற்றினர்.
இதையும் காண்க
[தொகு]- எ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சௌ. பார்த்தசாரதி
- கஸ்தூரி பாலாஜி
- கோ. நரசிம்மன்
- கோபாலன் கஸ்தூரி
- மு. வீரராகாவாச்சாரியார்
- எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார்
- சீ. இரங்கசுவாமி ஐயங்கார்
- சீ. இரங்கராஜன்
- கஸ்தூரி சீனிவாசன்