கௌரி விசுவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரி விசுவநாதன்
Gauri Viswanathan
விருதுகள்இயேம்சு ரசல் லோவெல் பரிசு (1998)
குக்கனெய்ம் உறுப்பினர் (1990)
கல்விப் பின்னணி
கல்வி
கல்விப் பணி
துறைஆங்கில இலக்கியம்
கல்வி நிலையங்கள்

கௌரி விசுவநாதன் (Gauri Viswanathan) ஓர் இந்திய அமெரிக்க கல்வியாளராவார். 1933 ஆம் ஆண்டு மனிதநேயப் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தெற்காசியா நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். [1]

சுயசரிதை[தொகு]

கௌரி விசுவநாதன் 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று கொல்கத்தாவில் ஐ.நா அதிகாரிகளுக்கு மகளாகப் பிறந்தார். [2] தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். [1] [2] பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரித்தானிய மற்றும் காலனித்துவ கலாச்சார ஆய்வுகளில் இவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. [2]

1989 ஆம் ஆண்டில் வெற்றியின் முகமூடிகள் என்ற தலைப்பில் இவர் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி மற்றும் இலக்கிய ஆய்வு என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினார். இது நவீன மொழி சங்கத்தின் இயேம்சு ரசல் லோவெல் பரிசை வென்றது, [3] 1998 ஆம் ஆண்டில் இவர் எழுதிய மடிப்புக்கு வெளியே என்ற தலைப்பிலான மதமாற்றம், நவீனத்துவம் மற்றும் நம்பிக்கை குறித்த நூல் அமெரிக்க ஒப்பீட்டு இலக்கிய சங்கம் வழங்கிய ஆரி லெவின் பரிசை வென்றது. [2] கௌரி 1990 ஆம் ஆண்டில் குக்கனெய்ம் உறுப்பினர் தகுதியையும் 1986 ஆம் ஆண்டில் மெலன் அறக்கட்டளை உறுப்பினர் தகுதியையும் பெற்றார். [4] .

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Gauri Viswanathan | The Department of English and Comparative Literature". english.columbia.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-06-13.
  2. 2.0 2.1 2.2 2.3 "Rediff On The NeT: Columbia Professor Wins Major Prize". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-13.
  3. "James Russell Lowell Prize Winners". Modern Language Association (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
  4. "Gauri Viswanathan". John Simon Guggenheim Memorial Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_விசுவநாதன்&oldid=3448586" இலிருந்து மீள்விக்கப்பட்டது