கோழிப்புக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோழிப்புக்கை என்பது ஈழத்தின், குறிப்பாக வடமராட்சிப் பகுதியிலும், ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உண்ணப்படும் ஒரு சிறப்பு உணவாகும். பச்சரி, நாட்டுக்கோழி இறைச்சி, மரக்கறிகள், சுவைப்பொருட்கள் பாவித்து குழையச் செய்யப்படும் உணவு கோழிப்புக்கை ஆகும். இது ஒரு வகைப் பொங்கல் ஆகும். புக்கை என்பது பொங்கலைக் குறிக்க ஈழத்தில் வழங்கும் சொல் ஆகும்.

இது வட இந்திய உணவான பிரியாணியுடன் ஒப்பிடத்தக்க, ஆனால் சுவையிலும் செய்முறையிலும் கணிசமாக மாறுபட்ட உணவாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிப்புக்கை&oldid=3620056" இலிருந்து மீள்விக்கப்பட்டது