கோலா பெலைட் நகரம்
கோலா பெலைட் (ஆங்கிலம்: Kuala Belait ) என்பது மலாய் மொழியில் அதிகாரப்பூர்வமாக பெக்கன் கோலா பெலைட் (அதாவது 'கோலா பெலைட் நகரம்') என அழைக்கப்படுகிறது, இது பெலைட் மாவட்டத்தில் புருனேயின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.[1] புருனேயின் தலைநகரான பந்தர் செரி பெகவனுக்குப் பிறகு இது நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் வசிக்கும் நகரமாகும். மேலும் இது மாவட்டத்தின் தலைநகராகவும் செயல்படுகிறது. கோலா பெலைட் அதிகாரப்பூர்வமாக ஒரு நகராட்சியாகும். அத்துடன் முகிமின் கீழ் ஒரு கிராம அளவிலான துணைப்பிரிவு ஆகும்[2]
கோலா பெலைட் என்றால் மலாய் மொழியில் "பெலைட் ஆற்றின் நுழைவாய்" என்று பொருள். அதன் பெயர் கோலா என்பதிலிருந்து வருகிறது, அதாவது இரண்டு நதிகளின் சங்கமம் அல்லது ஒரு நதியின் நுழைவாய் என்பதாகும். பெலைட் என்பது நதியின் பெயராகவும் மாவட்டத்தின் பெயராகவும் உள்ளது. இது உள்நாட்டில் "பெலேட்" என்றும் அழைக்கப்படுகிறது. பெலைட் என்று மாவட்டத்தை அழைக்கப்படுவதிலிருந்து வேறுபடுவதற்குத் தேவைப்படும்போது, இது உள்நாட்டில் ஆங்கிலத்தில் "கே.பி டவுன்" அல்லது மலாய் மொழியில் "பெக்கன் பெலைட்" என்று அழைக்கப்படுகிறது.
இருப்பிடம்
[தொகு]கோலா பெலைட் புருனேயின் மேற்கு எல்லைக்கு அருகில் சரவாக் மாநிலத்தில் 114.18ºE தீர்க்கரேகை மற்றும் 4.59ºN அட்சரேகைகளில் அமைந்துள்ளது. நகரம் தனது எல்லைகளாக வடக்கே தென் சீனக் கடலையும், மேற்கு மற்றும் தெற்கே பெலைட் நதியையும் கிழக்கே கம்போங் சுங்கை பாண்டன் மற்றும் தென்கிழக்கில் கம்போங் முமோங் ஆகிய புறநகர்ப் பகுதிகளை கொண்டுள்ளது.
பெலைட் மாவட்டத்தின் வரலாற்று நிர்வாக தலைநகரான கோலா பாலாய் இதன் தெற்கே அமைந்துள்ளது மற்றும் சாலை மற்றும் நதி இரண்டிலும் கோலா பெலைட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் எண்ணெய் நகரமான செரியா சுமார் 16 கி.மீ கிழக்குயேயும், பந்தர் செரி பெகவன் சுமார் 120 கி.மீ வடகிழக்கிலும், தென்மேற்கில் சரவாகியன் நகரமான மிரி சுமார் 40 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]கோலா பெலைட் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்தது.[3] பூர்வீகவாசிகள் பெலைட் மலாய் மக்கள், அவர்கள் முக்கியமாக மீனவர்கள். உள்ளூர் பழக்கவழக்கங்களின்படி, அங்கு வசிப்பவர்களில் இரண்டு குழுக்களுக்கிடையே ஒரு மோதல் ஏற்பட்டது, அந்தக் குழுக்களில் ஒன்று பெலைட் ஆற்று வாயின் மேற்குக் கரையில் நகர்ந்து தற்போதைய கம்போங் சுங்கை டெராபனைக் கண்டுபிடித்தது .
பெலைட் மாவட்டத்தின் பழைய வரலாற்று நிர்வாக தலைநகரம் கோலாய் பாலாயாக இருந்தது, மேலும் பெலைட் ஆற்றின் அருகே இருந்தது. பதங் பெராவாவில் (தற்போதைய செரியா) எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டபோது, பெலைட் ஆற்றின் முகப்பில் மாவட்டத்திற்கான புதிய நிர்வாக மையம் நிறுவப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சாலைகள் இல்லாததால் எளிதில் அணுக முடியாததாக இருந்தது.
இரண்டாம் உலகப் போரின்போது இந்த நகரம் சப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது, ஆனால் போருக்குப் பிறகு புருனேக்கு மீண்டும் திருப்பியளிக்கப்பட்டது. மறைந்த சுல்தான் ஒமர் அலி சைபுதீனின் ஆட்சியின் கீழ் ஜலான் பிரட்டி என்ற இடத்தில் வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டது. 1984 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், புருனே அரசாங்கத்தின் உள்ளூர் சேவைகளுக்காக பல புதிய அரசாங்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. நூற்றாண்டின் தொடக்கத்தில், நகரத்தின் மையத்தில் ஏராளமான விடுதிகள் கட்டப்பட்டன, இது வானலைகளை கடுமையாக மாற்றியது.
எண்ணெய் மற்றும் எரிவாயு
[தொகு]கோலா பெலைட் கடலோர இராசாவ் வாயு வயலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இருப்பினும், நகராட்சியில் எண்ணெய் கிணறுகள் இல்லை. இருப்பினும், புருனேஅருகிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகளை பெருக்க ஷெல் நிறுவனம் நகரில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.
காலநிலை
[தொகு]கோலா பெலைட்டின் காலநிலை வெப்பமண்டலமானது. ஆண்டு முழுவதும் வானிலை வெப்பமாகவும், ஈரப்பதமாகவும், மழையாகவும் இருக்கும்.
கல்வி
[தொகு]கல்வி முக்கியமாக கல்வி அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் பொருள் இந்த ஊரில் உள்ள மாணவர்கள் நாட்டின் பிற பகுதிகளைப் போலவே அதே கல்வி முறைக்கு உட்படுகிறார்கள். அரசுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Belait District" (PDF). www.information.gov.bn. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
- ↑ "Brunei Postal Services - postcodes". post.gov.bn (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-28.
- ↑ "History of Kuala Belait". Archived from the original on 2008-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.