உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலைய கட்டடம்

கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலையம் (Kuala Lumpur General Post Office) மலேசிய நாட்டிலுள்ள மிகப் பெரிய பொது அஞ்சல் நிலையமாகும். கோலாலம்பூர் நகரின் மையப் பகுதியில் உள்ள தாயாபூமி வளாகத்தில் இந்நிலையம் அமைந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதியன்று இந்நிலையம் தொடங்கப்பட்டது.[1] அப்போது பிரதமராக இருந்த மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலையத்தை திறந்து வைத்தார்.

போக்குவரத்து

[தொகு]

கோலாலம்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விரைவு போக்குவரத்து நிலையமான பசார் செனி நிலையத்திலிருந்து வடமேற்கே நடந்து செல்லும் தூரத்தில் இந்த அஞ்சல் நிலையம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

3°08′39″N 101°41′33″E / 3.1440426°N 101.6926347°E / 3.1440426; 101.6926347