உள்ளடக்கத்துக்குச் செல்

கோயம்புத்தூர் பங்குச் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்புத்தூர் பங்குச் சந்தை (Coimbatore Stock Exchange) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூரில் அமைந்திருந்த ஒரு பங்குச் சந்தையாகும். 1991-ஆம் ஆண்டில், இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் இது ஒரு பங்குச் சந்தையாக அங்கீகரிக்கப்பட்டது.[1] தமிழகத்தின் மேற்குப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பங்குகளை பட்டியலிடவும், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் ஒரு தளமாக இச்சந்தை இருந்தது.

1999-ஆம் ஆண்டில், பிற பங்குச் சந்தைகளுக்கு வரம்பற்ற தனிப்பட்ட உத்தரவாதங்களை வழங்குவதிலிருந்து தனது உறுப்பினர்களைத் தடுக்கும் நடவடிக்கையை இந்தப் பங்குச் சந்தை மேற்கொள்ளவில்லை.[2]

இந்த வர்த்தக மையம் 2006-ஆம் ஆண்டில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடனான தனது உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறியது. பின்னர் 2009-ஆம் ஆண்டில், வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து விலகுவதற்கான அதிகாரப்பூர்வ கோரிக்கையை வாரியத்திடம் சமர்ப்பித்தது.[1]

செயல்பாடுகள் நின்றுபோவதற்கு முன்பு, இந்த வர்த்தக மையத்தில் 170 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.[3] பெரிய பங்குச் சந்தைகளில் இணையவழி வர்த்தகம் அறிமுகமானதைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்த வர்த்தக மையம் செயலற்ற நிலையை அடைந்தது.[4]

நோக்கங்கள்

[தொகு]

உள்ளூர் நிறுவனங்களுக்கு மூலதனம் திரட்ட உதவுதல், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான பங்கு வர்த்தக வசதியை வழங்குதல், பங்குச் சந்தை முதலீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு நிதி ஆதரவு வழங்குதல் ஆகியவை கோயம்புத்தூர் பங்குச் சந்தையின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.

மேற்கோள்கள்

[தொகு]