கோபேந்திரராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபேந்திரராஜா
சௌகான் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்ஆட்சி 771-784 பொ.ச.
முன்னையவர்முதலாம் சந்திரராஜா
பின்னையவர்முதலாம் துர்லபராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

கோபேந்திர-ராஜா (Gopendraraja) (ஆட்சி சுமார் 771-784 பொ.ச.) வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை ஆண்ட சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் கோபேந்திரகன் என்றும் அழைக்கப்படுகிறார். [1]

கோபேந்திரன் தனது சகோதரன் முதலாம் சந்திரராஜாவுக்குப் பின் சகாமன மன்னனாக ஆனார். பிருத்திவிராச் சௌகானின் வரலாற்றைக் கூறும் நாட்டுப்புறக் கதையான "பிருத்விராஜ விஜயம்" என்பதின்படி,முதலாம் விக்ரகராஜா இவர்களின் தந்தையாக அறியப்படுகிறார். [2] இருப்பினும், பிற்கால ஹம்மிர மகாகாவ்யம் இவர்களின் தந்தை விக்ரகராஜாவின் மூதாதையர் நரதேவன் என்று கூறுகிறது. [3]

கோபேந்திரன் ஒரு சுல்தான் பெக் வாரிசாவை போரில் தோற்கடித்ததாக பிரபந்த-கோசம் கூறுகிறது. [4] பெக் வாரிசா அரபுத் தளபதி முகமது பின் காசிமின் அடிமையாக இருந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங் கருதுகிறார். [5]

கோபேந்திரனுகுப் பிறகு இவரது மருமகன் முதலாம் சந்திரராஜாவின் மகனான முதலாம் துர்லபராஜா முதலாம் துர்லபராஜா அரியணை ஏறினார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. Dasharatha Sharma 1959, ப. 28.
  2. 2.0 2.1 R. B. Singh 1964, ப. 55.
  3. Anita Sudan 1989, ப. 23.
  4. R. B. Singh 1964, ப. 88.
  5. R. B. Singh 1964, ப. 89.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபேந்திரராஜா&oldid=3411738" இலிருந்து மீள்விக்கப்பட்டது