கோட்டைப்புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டைப்புதூர் என்ற ஊரானது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் செய்யும் வேளாண் பெருங்குடி மக்கள் பெருமளவு வசிக்கின்றனர். கொங்கு வேளாளர் இன மக்கள் அதிகம் உள்ளனர். கோட்டைப்புதூரானது கொடுமுடியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலும் மொடக்குறிச்சிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் அரச்சலூரிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் வெள்ளகோவிலில் இருந்து 25 கி.மி தொலைவிலும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டைப்புதூர்&oldid=2139310" இலிருந்து மீள்விக்கப்பட்டது