கொறித்துண்ணி இயல்
கொறித்துண்ணி இயல் (Rodentology )என்பது கொறித்துண்ணி ஆய்வாளரால் கொறித்துண்ணிகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கான பாலூட்டி இயலின் ஒரு பிரிவாகும்.[1]இதில் எலிகள் (Rodents) பற்றி ஆய்வு செய்யப்படுகிறது;கொறித்துண்ணிகளின் குழுவில் எலிகள், அணில்கள் மட்டுமல்லாது பல்வேறு இனங்களும் அடங்கும். விலங்கியல் கண்ணோட்டத்தில், இது பல்வேறு கொறித்துண்ணி இனங்களின் நடத்தை, உயிரியல் மற்றும் வகைப்பாட்டை ஆராய்கிறது. கொறித்துண்ணிகள் பற்றிய ஆய்வில் அவற்றின் மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் பங்கு ஆகியவை அடங்கும். மேலும், இந்த ஆய்வுகள் பூச்சி கட்டுப்பாடு, நோய்களைப் பரப்பும் ஊடகங்கள், விவசாயத்தில் நோய் மேலாண்மை, சுற்றுச்சூழல் சேதம், உலகமயமாக்கலும் நோய்களும், மனித சமூகத்தின் மீது ஏற்படும் விளைவுகள் மற்றும் நோய்க்கிருமி பரவல் போன்ற துறைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
சமூகத்திற்கு நன்மைகள்
[தொகு]கொறித்துண்ணி இயல் ஆய்வு விவசாயம், இயற்கை சமநிலை, உணவு பாதுகாப்பு, உலகளாவிய சுகாதாரம், மனித ஆரோக்கியம், அடித்தள வசதி பாதுகாப்பு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, பொது சுகாதாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் மனித சமுதாயத்திற்கு பெரும் பயன்களை வழங்குகிறது. .[2] [3]