குமாரபாளையம்

ஆள்கூறுகள்: 11°26′11″N 77°43′24″E / 11.436300°N 77.723200°E / 11.436300; 77.723200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொமாரபாளையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குமாரபாளையம்
—  விசைத்தறி நகரம் - முதல்நிலை நகராட்சி  —
குமாரபாளையம்
இருப்பிடம்: குமாரபாளையம்

, தமிழ்நாடு

அமைவிடம் 11°26′11″N 77°43′24″E / 11.436300°N 77.723200°E / 11.436300; 77.723200
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் குமாரபாளையம்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
மக்களவைத் தொகுதி குமாரபாளையம்
சட்டமன்றத் தொகுதி குமாரபாளையம்
சட்டமன்ற உறுப்பினர்

பி. தங்கமணி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

65,640 (2001)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.10 சதுர கிலோமீட்டர்கள் (2.74 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/Komarapalayam

குமாரபாளையம் (Kumarapalayam), பொதுவழக்கில் கொமாரபாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், முதல் நிலை நகராட்சி ஆகும்.

வரலாறு[தொகு]

1978இல் பேரூராட்சியாக இருந்தது மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, பின் 1984இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, 1990இல் இருந்து முதல் நிலை நகராட்சியாக செயல்படுகிறது.

அமைவிடம்[தொகு]

இது காவிரி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் ஈரோடு மாவட்டம் அமைந்துள்ளது. இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும்.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 14கி.மீ தொலைவிலும் ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 15கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஊத்தங்கரையில் இருந்து 148km தொலைவிலும் அமைந்துள்ளது .

ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்நகரம் விசைத்தறி கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். தேசிய நெடுஞ்சாலை 544 இதன் வழியாக செல்கிறது.

இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பவானி நகரம் (கூடுதுறை) அமைந்துள்ளது .

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 65% கைலிகள் ஏற்றுமதி இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செய்யப்படுகிறது. பலதரப்பட்ட மக்கள் இங்கே வசிக்கின்றனர். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன.

முக்கியத்தொழில்[தொகு]

ஈரோட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து தான் கைலி (அ) லுங்கி (அ) வேட்டி ஏற்றுமதியாகிறது. இங்கு தயாராகும் கைலிகள் அதிக தரமானவை. குமாரபாளையமும் அதற்குப் பக்கத்திலுள்ள பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன.

கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே இங்கு உற்பத்திகள் தொடங்கபட்டன. இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர்.

கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில் கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறை குமாரபாளையத்தில் உள்ளது. இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. கைலிகள் தவிர, தளபதி வேட்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கென்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை தவிர, கைக்குட்டைகளும், டிஸ்கோ துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இதனை கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள்.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை

இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள், சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகைக் கொண்டு மிளிருகிறது.

கூடுதுறை கோயில்

சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்[தொகு]

  • பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு வேத நாயகி சமேத சங்கமேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால், இது கூடுதுறை என வழங்கபடுகிறது. மேலும் திருநானா என புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.முக்கிய சைவத்திருத்தலங்கலில் பவானி கூடுதுறையும் ஒன்று.
  • லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை தெரியும்.
  • குமாரபாளையம் செங்காமுனியப்பன் கோவில்
  • குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும்.

திருவிழாக்கள்[தொகு]

இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.ஆடி மாதம் வருகிற ஆடி பெருக்கு விழாவில் காவிரி நதியில் நீராடி கோவிலுக்கு சென்று வழிபட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படும்.

  • குமாரபாளையம் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, வைகுண்ட ஏகாதசி போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். விட்டலபுரி அருள்மிகு ராமர் திருக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
  • காளியம்மன், கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழா வெகுசிறப்பான ஒன்றாகும்.
  • சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் தை மாதம் நடைபெறும் திருவிழா வெகுசிறப்பான ஒன்றாகும்.
  • குமாரபாளையம் முனியப்பன் கோவில் திருவிழா தை மாதத்தில் கொண்டாடப்பெறும்.
  • குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும்.
  • காட்டூர் ,அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மாசி மாதம் மற்றும் ஆயுத பூஜை அன்று அம்புசேர்வ பூஜை வெகு விமர்சியாக நடைபெறும்.

சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்[தொகு]

  • குமாரபாளையத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அருவியானது அமைந்துள்ளது.
  • குமாரபாளையத்திலிருந்து 53 கி.மீ. தொலைவில் கொடிவேரி அணை அமைந்துள்ளது.
  • குமாரபாளையத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் மேட்டூர் அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது.
  • குமாரபாளையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊராட்சிகோட்டை மலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • குமாரபாளையத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள நாமக்கல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர், ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றன.
  • குமாரபாளையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள திருச்செங்கோட்டு நகரில் மலையின் மீது வீற்றிருக்கும் அருள்மிகு அர்த்தனாரீசுவரர் சுவாமி திருத்தலமானது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
  • குமாரபாளையத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் பவானி சாகர் அணை அமைந்துள்ளது.

2011 உள்ளாட்சித் தேர்தல்[தொகு]

மொத்தம் 33 வார்டுகளை உள்ளடக்கியது,இதில் 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சாரா வேட்பாளராக நின்ற கி. தனசேகரன் வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கொ. அண்ணாதுரை சுயேச்சை 436
மா. கவிதா சுயேச்சை 200
இரா. குணசேகரன் திமுக 9246
கி. தனசேகரன் சுயேச்சை 17276
நாகராஜன் ஏ.கே. அதிமுக 12471
பழனிசாமி கே.சி. பாமக 442
மாதேஸ்வரன் ப்பி.ஏ. தேமுதிக 2937
மோகன் வெங்கட்ராமன் டி.கே.ப்பி. காங்கிரசு 1695
கி. லோகநாதன் சுயேச்சை 175

மேற்கோள்கள்[தொகு]

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Komarapalayam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

குமாரபாளையம் நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2011-04-11 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரபாளையம்&oldid=3872104" இலிருந்து மீள்விக்கப்பட்டது