கொட்டரை தடுப்பணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொட்டரை தடுப்பணை, தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் கொட்டரையில் மருதையாற்றின் குறுக்கேக் கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கமாகும்.

வரலாறு[தொகு]

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் கட்டுவதற்க்காண அரசாணை 2013 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.

பாசன வசதி[தொகு]

4199 ஏக்கர் நிலங்கள் பாசண வசதி பெறுகின்றன.

கொட்டரை அணை மதிப்பீடு[தொகு]

சுமார் 56.7 கோடி ரூபாய் மதிப்பிற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 67.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் , மொத்தத்தில் ரூ124.2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணைக்கட்டு மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகின்றது.[1], [2]

அமைப்பும் கொள்ளளவும்[தொகு]

கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே 2170 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுவருகின்றது. கொட்டரை தடுப்பணை சுமார் 56.7 கோடி ரூபாய் மதிப்பிற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 67.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் , மொத்தத்தில் ரூ124.2 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணைக்கட்டு மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகின்றது.70% நிலங்கள் கொட்டரை கிராமத்திலும் மற்றும் 30% ஆதனூர் கிராமத்திலும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.அணையின் முழு கொள்ளளவு-212 மி.கன அடி,மொத்த பரப்பளவு 815 ஏக்கர் கொட்டரை நீர்த்தேக்கத்தில் 211.58 மில்லியன் கனஅடி நீரை தேக்கிவைக்க முடியும். இந்த அணையில் 2 நீர் வெளியேற்று வாய்க்கால்கள் மற்றும் 100 மீட்டர் நீளம் கொண்ட வடிகால் உள்ளது இதன் வழியாக அணை நிரம்பி வெள்ள நீர் திரும்பவும் மருதையாற்றில் கொட்டரை கீழக்காடு பகுதியில் இணைந்து பயணிக்கிறது. [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. புதர்களால் மண்டி கிடக்கும் மருதையாறு பரணிடப்பட்டது 2019-05-15 at the வந்தவழி இயந்திரம், தினகரன், நாள்: மே 15, 2019.
  2. [1]
  3. பொதுப்பணித்துறை அறிக்கை

4.[1] https://www.facebook.com/kottarai/

  1. "Kottarai Marudaiyar Reservoir - கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம்". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டரை_தடுப்பணை&oldid=3707958" இலிருந்து மீள்விக்கப்பட்டது