கொடிநிலை, கந்தழி, வள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள்ளி என்பது ஒருவரின் வள்ளண்மையைக் குறித்துப் போற்றிப் பாடுவது.

பாடாண் திணையில் கடவுளை வழிபடுதலும் பிறரைக் கடவுளாக்கி வழிபடுதலும் உண்டு.

  • அப்போது வழிபடும் கடவுளரின் ஏற்றம் கூறுவது கொடிநிலை.
  • பகைவரை அழித்த பாங்கைக் கூறுவது கந்தழி.
  • வள்ளண்மையைக் கூறுவது வள்ளி. [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
    வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
    கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிநிலை,_கந்தழி,_வள்ளி&oldid=3211565" இலிருந்து மீள்விக்கப்பட்டது