உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சியின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொச்சி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். கொச்சி கேரள தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. ஆங்கிலயர் ஆட்சி ழரை மற்றும் பல நூற்றாண்டுகளாக, கொச்சி நகரம் பெயரிடப்பட்ட சுதேச அரசின் இடமாக இருந்தது.கொச்சி அதன் வரலாற்றை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துள்ளது.கொச்சி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்திய மசாலா வர்த்தகத்தின் மையமாக இருந்தது.மேலும் பல கிரேக்கர்கள்,ரோமானியர்கள்,யூதர்கள்,அரேபியர்கள் மற்றும் சீனர்கள் இங்கு வர்த்தகம் செய்ததாக அறியபடுகிறது.[1] 1341 ஆம் ஆண்டு பெரியார் நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொடுங்கல்லூர் துறைமுகம் அழிக்கப்பட்ட பின்னர் உலக வர்த்தக வரைபடத்தில் கொச்சி ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தது.[2] ஜெங் ஹீவின் புதையல் கடற்படையின் 15ஆம் நூற்றாண்டில் கொச்சிக்கு விஜயம் செய்தபோது,அவரது கப்பலில் இருந்த மா ஹீவான் எழுதிய புத்தகங்களில் கொச்சியைப் பற்றிய ஆவணப்படுத்தப்பட்ட குறிப்புகள் உள்ளன.[3] 1440 இல் கொச்சிக்கு விஜயம் செய்த இத்தாலிய பயணி நிக்காலா டா கான்டி எழுதிய கணக்குகளில் கொச்சியைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.இன்று கொச்சி கேரளாவில் வணிக மையமாக உள்ளது, மற்றும் வேகமாக வளர்ந்து இந்தியாவில் பெருநகரங்கள் இரண்டாம் அடுக்குகளில் ஒன்றாகும்.[4]

வரலாற்றுக்கு முந்தையது

[தொகு]

கொச்சியின் வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி அதிகம் தெரியவில்லை.கற்காலம் வசிப்பதற்க்கு தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.இப்பிராந்தியத்தில் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையின் ஒரே சுவடு திரிபுனிதுராவில் காணப்படும் மென்ஹீர் ஆகும்.

சுதேச ஆட்சி

[தொகு]

கொச்சியின் ஆரம்பகால வரலாறு சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை.கி.பி 1341 இல் கொடுங்கல்லூரில் துறைமுகம் சரிந்த பின்னர் ஒரு வர்த்தக துறைமுகமாக கொச்சியின் முக்கியத்துழம் வளர்ந்தது.

கி.பி 1102 ஆம் ஆண்டு குலசேகரன் பேரரசு ஆட்சிக்கு வந்த உடன் கொச்சி மாநிலம் உடைந்தது.[5] 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலபார் கடற்கரையில்,காலிகட் மற்றும் கொச்சி ஆகியவை கடுமையான போட்டியில் இருந்தன, எனவே சீனாவின் மிங்வம்சம் கொச்சிக்கும் அதன் ஆட்சியாளர்க்கும் கெய்லி என சிறப்பு பதவி வழங்குவதன் மூலம் தலையிட முடிவு செய்தது.காலிகட் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் துறைமுக நகரமாக இருந்தது.ஆனால் கொச்சி அதன் முக்கிய போட்டியாளராக உருவெத்து வந்தது.ஐந்தாவது மிங் புதையல் பயணத்திற்காக,ஜெங் கொச்சியின் கெய்லிக்கு முத்திரையை வழங்கவும்,அவரது ராஜ்யத்தில் ஒரு மலையை ஜெங்குவோ ஜி ஷான்(நாட்டை பாதுகாக்கும் மலை) என வழங்கவும் அறிவுறுத்தப்பட்டார்.கொச்சி மிங் சீனாவின் பாதுகாப்பில் இருந்த வரை, காலிகாட்டின் ஜாமோரின் கொச்சியை ஆக்கிரமிக்க முடியவில்லே மற்றும் ஒரு இராணுவ மோதல் தவிர்க்கப்பட்டது.மிங் புதையல் பயணங்களை நிறுத்தியது கொச்சிக்கு எதிர்மறையான முடிவுகளைக் கொடுத்தது,ஏனெனில் காலிகட்டின் ஜாமோரின் இறுதியில் கொச்சிக்கு எதிராக ஒரு படையெடுப்பைத் தொடங்கினார்.15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்,ஜாமோர் கொச்சியை ஆக்கிரமித்து, துறைமுகத்தின் ராஜாவாக தனது பிரதிநிதியை நிறுவினார்.

கொச்சியின் ஆட்சியாளர்கள்

[தொகு]
  1. உன்னி ரம்மன் கோயில் - 11 (1503–1537)
  2. வீர கேரள வர்மா (1537–1565)
  3. கேசவ ராமவர்மா (1565-1601)
  4. வீரகரல வர்மா (1601-1615)
  5. ரவிவர்மா (1615-1624)
  6. வீர கேரள வர்மா (1624-1637)
  7. கோதவர்மா (1637-1645)
  8. வீர ரெயிரா வர்மா (1645-1646)
  9. வீரகரல வர்மா (1645-1650)
  10. ராமவர்மா (1650-1656)
  11. ராணி கங்காதர லட்சுமி (1656-1658)
  12. ராமவர்மா (1658–1562)
  13. கோதவர்மா (1662-1663)
  14. வீர கேரள வர்மா (1663-1687)
  15. ராம வர்மா (1687-1693)
  16. ரவி வர்மா (1693-1697)
  17. ராம வர்மா (1697-1701)
  18. ராம வர்மா (1701–1721)
  19. ரவி வர்மா (1721-1731)
  20. ராம வர்மா (1731–1746)
  21. வீர கேரள வர்மா (1746-1749)
  22. ராம வர்மா (1749–1760)
  23. வீர கேரள வர்மா (1760–1775)
  24. ராம வர்மா (1775-1790)

வெளிநாட்டு ஆட்சி

[தொகு]

கொச்சி பல வெளிநாட்டு சக்திகளின் ஆட்சியின் கீழ் இருந்தது, அந்த சமயத்தில் கொச்சியின் ராஜா இன்னும் பெயரிடப்பட்ட தலைவராக இருந்தார்.

போர்த்துகீசிய காலம் (1503−1663)

[தொகு]

இந்தியாவில் முதல் ஐரோப்பிய குடியேற்றின் காட்சியாக கொச்சி இருந்தது.1503 முதல் 1663 வரை கொச்சி ராஜா என்ற பெயரில் போர்ச்சுகல் ஆட்சி செய்தது.கொச்சி 1510 வரை போர்த்துகீசிய இந்தியாவின் தலைநகராக இருந்தது.1530 ஆம் ஆண்டில், செயிண்ட் பிரான்சில் சேவியர் வந்து ஒரு கிறிஸ்தவ பணியை நிறுவினார்.

டச்சு காலம் (1663−1773)

[தொகு]
1663 இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியரிடமிருந்து கொச்சி நகரத்தை பைப்பற்றியது

போர்ச்சுகீசிய ஆட்சியால் வெறுப்படைத்த அரச குடும்பதை சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள் உதவிவை கோரினார்.டச்சுக்காரர்கள் வெற்றிகரமாக கொச்சியை கைப்பற்றி 1664 இல் கொச்சி கோட்டை நகராட்சியை நிறுவினர்.

ஆங்கிலயர் காலம்

[தொகு]

1814 ஆம் ஆண்டில் ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தத்தின்படி, கொச்சி மற்றும் அதன் பிரதேசம் மலயா தீவுக்கு ஈடாக ஐக்கிய இராச்சியத்திற்க்கு ஒப்படைக்கப்பட்டன.

சுதந்திரத்திற்க்குப் பிந்தைய காலம்

[தொகு]

1947 இல், ஆங்கில காலனித்துவ ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது.இந்திய ஒன்றியத்தில் விருப்பத்துடன் இணைந்த முதல் சுதேச மாநிலம் கொச்சின்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "எர்ணாகுளத்தின் வரலாறு". 15 நவம்பர் 2007. Archived from the original on 2007-11-15. Retrieved 2021-03-09.
  2. "கொச்சி துறைமுகத்தின் வெளிப்பாடு". 26 மே 2006. Archived from the original on 2015-09-15. Retrieved 2021-03-09.
  3. "நிக்கோலோ டி கான் டியின் கணக்குகள்". 21 பிப்ரவரி 2013. Archived from the original on 2013-02-21. Retrieved 2021-03-09. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "நகர்கள் மற்றும் வினோதமான சுற்றுபுறங்களை உருவாக்குதல்". 3 பிப்ரவரி 2017. Archived from the original on 2017-02-02. Retrieved 2021-03-09. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "கொச்சின் வரலாற்றுக்கு முந்தையது". கொச்சின் கார்ப்பரேசன். 20 சுன் 2006. Archived from the original on 2006-06-20. Retrieved 2021-03-09. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சியின்_வரலாறு&oldid=3929262" இலிருந்து மீள்விக்கப்பட்டது