கொங்காலே கொட பண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்காலே கொட பண்டா என்பவர் இலங்கை ஆங்கிலேடம் இருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்காகப் போராடிய தேசிய வீரர்களுள் ஒருவராவார். இவர் களனியில் வனவாசல என்னும் பிரதேசத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் வர்ணபுர தேவக டேவிட். வனவாசல டேவிட், பேலியகொட டேவிட்எனும் பெயர்களாலும் இவர் அழைக்கப்படார். வரி எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு வெளியிட்டு மலைநாட்டிற்கு வந்த அவர் அங்கு திருமணப்பந்தத்தில் இணைந்த்துகொண்டார் . பிறகு அவர் கொங்கால கொட பண்டா என பிரசித்தம் அடைந்தார் . கொங்காலே கொட பண்டா சிங்களவர்களின் மன்னனாக சீறீ சர்வசித்தி ராஜசிங்க என்னும் பெயரில் தம்புள்ளையில் முடிசூடிக்கொண்டார். 1848இல் இலங்கையில் இடம்பெற்ற சுதந்திரப்போரின் போது வீரபுரன் அப்பு எனும் பௌத்தபிக்குவுடன் தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட்டார். உயிருடன் கைதான அவர் குற்றவாளீயாக ஒப்புக்கொண்டபடியால், மலாக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். சிங்களவரின் வீர புருஸரான இவர் நோயினால் 1849 டிசம்பர் 1 ஆம் திகதி மரணமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்காலே_கொட_பண்டா&oldid=3893670" இலிருந்து மீள்விக்கப்பட்டது