கைந்நிலை பழைய உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

கைந்நிலை நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]

கைந்நிலை என்னும் நூலிலேயே 18 செய்யுள்கள் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள பாடல்கள் முழுமைக்கும் கூடப் பழைய உரை கிடைக்கவில்லை. கிடைத்துள்ள உரை, நூலிலுள்ள பாடல்களுக்கு அதன் அகத்திணைப் பொருளை நன்கு விள்ளும் வகையில் உமைந்துள்ளது.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
  2. 1931 அனந்தராமையர் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைந்நிலை_பழைய_உரை&oldid=1881289" இலிருந்து மீள்விக்கப்பட்டது