கைகையவன்சி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்னபுரியின் காலச்சூரிகள்
11ஆம் நூற்றாண்டு–12ஆம் நூற்றாண்டு
தலைநகரம்இரதன்பூர்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
11ஆம் நூற்றாண்டு
• முடிவு
12ஆம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
இரத்னபுரியின் காலச்சூரிகள்
போன்சலே வம்சம்
தற்போதைய பகுதிகள்இந்தியா
கைகையவன்சி இராச்சியம் is located in இந்தியா
Raipur
Raipur
Ratanpur
Ratanpur
நவீன இந்தியாவில் வம்சத்தின் தலைநகரங்களின் இருப்பிடம்

கைகையவன்சி இராச்சியம் (Haihaiyavansi Kingdom) என்பது கிழக்கு இந்தியாவில் உள்ள மகாநதியின் மேல் பகுதியில் இருந்த ஒரு பேரரசு ஆகும். இது இன்றைய சத்தீசுகர் மாநிலத்தையும், மேற்கு-மத்திய ஒடிசாவின் மத்திய பகுதியை உள்ளடக்கியிருந்தது. பொ.ச.12 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை கைகையவன்சிகளால் இந்த இராச்சியம் ஆளப்பட்டது. இவர்கள் திரிபுரியின் காலச்சூரிகளின் ஒரு கிளையினராக இருந்தனர். மேலும் பல ஆண்டுகளாக தாய் வம்சத்தின் அடிமைகளாக ஆட்சி செய்தனர்.

இராச்சியம்[தொகு]

மேல் நருமதை பள்ளத்தாக்கில் மையமாக இருந்த பத்தாம் நூற்றாண்டு காலச்சூரி அல்லது சேதி நாட்டின் கிழக்கு மாகாணமாக இந்த இராச்சியம் உருவானது. நவீன ஜபல்பூருக்கு அருகிலுள்ள தேவாரை (திரிபுரி) தலைநகராகக் கொண்டு காலச்சூரிகள் ஆட்சி செய்தனர்.[1] பதினொன்றாம் நூற்றாண்டில் இரத்தினபுரி கிளை, மேல் மகாநதிப் படுகையில் குடியேறியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் அது சுதந்திர அரசானது.[2][3] ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மகாநதியின் மேல் பகுதி இரத்தினபுரி காலச்சூரிகளின் வம்சாவளியைச் சேர்ந்த கைகையவன்சி மன்னர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த இராச்சியம் வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையேயான முக்கிய பாதைகளுக்கு கிழக்கே அமைந்திருந்தது. மேலும் 13-16 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் படையெடுப்புகளில் இருந்து தன்னைத் தடுத்துக் கொண்டது. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு வம்சப் பிளவு இராச்சியத்தை வடக்கு, இரதன்பூரில் உள்ள பழைய கிளைக்கும் தெற்கே இராய்ப்பூரில் உள்ள இளைய கிளைக்கும் இடையில் பிரித்தது.

18-ஆம் நூற்றாண்டின் மராத்தியப் படையெடுப்புகளுடன் இராச்சியம் முடிவுக்கு வந்தது. போன்சலே குலத்தைச் சேர்ந்த மராட்டியர்கள் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெராரில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மேலும் 1743-இல் அண்டை நாடான கோண்டு இராச்சியமான தியோகரைக் கைப்பற்றினர். போன்சலேயர்கள் நாக்பூரைத் தங்கள் தலைநகராகக் கொண்டு, கிழக்கை கைகையவன்சி இராச்சியமாக விரிவுபடுத்தினர். மேலும் கிழக்கே வங்காளம் மற்றும் ஒடிசாவிற்குள் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு தளமாகப் பயன்படுத்தினார்கள். இராய்கர் 1741-இல் போன்சலேக்களிடம் வீழ்ந்தது. மேலும் 1744 வாக்கில் மராத்திய அரசின் மீதான கட்டுப்பாடு உறுதியாக நிறுவப்பட்டது.

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Kalachuri Dynasty". பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
  2. Om Prakash Misra 2003, ப. 14.
  3. Richard Salomon 1996, ப. 154.
  • Richard G. Salomon (professor of Asian studies) (1996). "British Museum stone inscription of the Tripurī Kalacuri prince Valleka". Indo-Iranian Journal 39 (2): 133–161. doi:10.1163/000000096790084999. 
  • . 
  • . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைகையவன்சி_இராச்சியம்&oldid=3388869" இலிருந்து மீள்விக்கப்பட்டது