கே. எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1995
முதல்வர்முனைவர் வி. ராதாகிருஷ்ணன்
மாணவர்கள்1595
அமைவிடம், ,
வளாகம்கே. எஸ். ஆர் கல்வி நகர்
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில், தோக்கவாடியில் 1995ஆம் ஆண்டு கே. எஸ். ரங்கசாமி அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் ஒப்புதலுடன், இது சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது[1].. இது இந்திய தர நிறுவனம் (ISO) சான்றிதழ் மற்றும் தேசிய கல்வி தரபாட்டு நிறுவனம் (NAAC) அங்கீகாரம் பெற்றது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை, ஆங்கிலவியல், வணிகவியல், வணிகவியல் நிறுவனச்செயலாண்மை, இளம் அறிவியல் பாடப்பிரிவில் கணிதவியல் முதுகலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் என பல பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

சான்றுகள்[தொகு]