கே. எல். வி. வசந்தா
K. L. V. Vasantha | |
---|---|
![]() 1945 பர்மா ராணி திரைப்படத்தில் வசந்தா | |
பிறப்பு | வள்ளிக்கண்ணு 1923 குன்னக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | 2008 சென்னை, தமிழ்நாடு |
குடியுரிமை | இந்தியர் |
பணி | நடிகை, பாடகி |
வாழ்க்கைத் துணை | டி. ஆர். சுந்தரம் |
கே. எல். வி. வசந்தா (K. L. V. Vasantha, 1923 - 2008) என்பவர் தமிழகத் திரைப்பட நடிகையாவார். ரம்பையின் காதல் திரைப்படத்தில் நடித்துப் புகழ் பெற்ற இவர் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இவர் 1923 ஆம் ஆண்டு குன்னக்குடியில் பிறந்தார். தாயார் பெயர் லட்சுமி அம்மாள், இவரது இயற்பெயர் வள்ளிக்கண்ணு. திரைப்படங்களில் நடிப்பதற்காக வசந்தா தேவி என மாற்றிக் கொண்டார். பின்னர் தனது பெயரை கே. எல். வி. வசந்தா எனச் சுருக்கிக் கொண்டார். இவர் சிறு வயதிலேயே வாய்ப்பாட்டு, நடனம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். பிற்காலத்தில் நடிகையானபோது தனது வேடங்களுக்கான பாடல்களை அவரே சொந்தமாகப் பாடி நடித்தார். இவர் 1934 இல் பவளக்கொடி (1934 திரைப்படம்)|பவளக்கொடி]] படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 1939-ல் வெளியாகிய வெற்றிப்படமான ரம்பையின் காதல் படத்தின் கதாநாயகியாகப் புகழ்பெற்றார்.[1]
நடித்த படங்கள்[தொகு]
- பவளக்கொடி, 1934
- ரம்பையின் காதல், 1939
- மதன காமராஜன், 1941 பிரேமவள்ளி
- நந்தனார், 1942
- ராஜ ராஜேஸ்வரி, 1944
- பர்மா ராணி, 1945
- சுபத்ரா
- சித்ரா
- சுலோச்சனா, 1946
- சாலி வாஹனன்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிரதீப் மாதவன் (13 அக்டோபர் 2017). "எஸ்.எஸ்.வாசனின் முதல் தெரிவு!". கட்டுரை. தி இந்து தமிழ். 13 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.