கேரள சுகுணா போதினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரள சுகுணா போதினி
Keraliya Suguna Bodhini
எம்.சி நாரயணப்பிள்ளை, சிதம்பரம் வாத்தியார்,
வகைமகளிர் இதழ்
இடைவெளிஇதழ்
முதல் வெளியீடு1886
நாடு இந்தியா
மொழிமலையாளம்,

கேரள சுகுணா போதினி (Keraliya Suguna Bodhini) இந்தியாவின் கேரள மாநிலத்தில் பேசப்படும் மலையாள மொழியில் வெளியிடப்பட்ட முதல் பெண்கள் பத்திரிகையாகும். [1] கேரள சுகுணபோதினி என்றும் அழைக்கப்படுகிறது. முதன்முதலில் 1886 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் இப்பத்திரிகை வெளியிடப்பட்டது. [1][2] கேரள வர்ம வலிய கோயி தம்புரான், என்.சி. நாராயண பிள்ளை மற்றும் கே.சிதம்பரம் வாத்தியார் ஆகியோர் இதில் எழுதி பெரும்பங்கு வகித்தனர். [3]

சுகுணபோதினியின் 1976 ஆம் ஆண்டு பதிப்பானது தார்மீக மனசாட்சி, சமையல், சிறந்த பெண்களின் சுயசரிதைகள் மற்றும் வளர்ப்பு, அர்ப்பணிப்பு, தாய்மை பெண்மணியை ஊக்குவிக்கும் பிற அறிவூட்டும் தலைப்புகள் போன்ற படைப்புகளை ஊக்குவித்தது. இதழில் அரசியல் தொடர்பான படைப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. [4] கல்வி, பயணம் மற்றும் உடைக்கான பெண்களின் உரிமைகள் போன்றவையும் இதழில் விவாதிக்கப்பட்டன.

1886 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இதழ் ஆறு மாதங்களுக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. பத்திரிகை 1892 இல் மீண்டும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Teena Antony (2013). "Women’s Education: A Reading of Early Malayalam Magazines". Journal of Social Sciences 12 (3). http://journals.christuniversity.in/index.php/artha/article/view/725/538. பார்த்த நாள்: 15 February 2017. 
  2. "When women make news". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
  3. "What Led to the End of Kerala's Matrilineal Society?". பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
  4. "A magazine much ahead of its time". பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_சுகுணா_போதினி&oldid=3233601" இலிருந்து மீள்விக்கப்பட்டது