சைனம் என்பது தற்போது இருக்கும் மூன்று மிகப் பழமையான இந்திய மத மரபுகளில் ஒன்றாகும். இது, தென்னிந்தியாவின் கேரளாவில் மிகக் குறைந்த இருப்பைக் (0.01%) கொண்டுள்ளது. 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கேரளாவில் சுமார் 4500 சமணர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கொச்சின் நகரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டத்தில் உள்ளனர்.
இடைக்கால சமணக் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கேரளாவின் எல்லைகளில், குறிப்பாக வடகிழக்கில் வயநாடு, பாலக்காட்டுக் கணவாயில் உள்ள ஆலத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிதறால் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. கொச்சினுக்கு அருகில் அமைந்துள்ள "திருக்குணவாயி"ல் உள்ள ஆலயம் இடைக்கால கேரளாவில் (கிபி 9 ஆம் நூற்றாண்டிலிருந்து) அமைக்கப்பட்ட முக்கிய சமணக் கோயிலாக இருந்திருக்கலாமெனக் கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. "திருக்குணவாய் கோயிலின் விதிகள்" எனப் பொதுவாக அழைக்கப்படும் விதிமுறைகள், கேரளாவின் மற்ற அனைத்து சமணக் கோயில்களுக்கும் முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் விளங்குகின்றது [1].
கேரளாவில் உள்ள சில சமணக் கோயில்கள் பிற்காலத்தில் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன. அக் கோயில்களிலுள்ள திருவுருவங்கள் இந்துக் கடவுள்களாக வணங்கப்பட்டு, இந்துக் கடவுளர் கூட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன. இந்துக்களும் சமணர்களும் அவரவர் கடவுளரை ஒரே கோவிலில் வழிபடுவது ஒரு வழக்கமாக மாறியுள்ளது [1].
↑ 1.01.1Narayanan, M. G. S. Political and Social Conditions of Kerala Under the Cēra Perumāḷs of Makōtai (c. AD 800 - AD 1124). Thrissur (Kerala): CosmoBooks, 2013. 340-42.