கெத்சீ சண்முகம்
கெத்சீ சண்முகம் (1934) ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண். நாவலப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஒரு தமிழாசிரியர். சமூகச் செயற்பாட்டாளர். உளவியல் ஆலோசகர். இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சேவையை வழங்கியவர். தனது சேவைகளுக்காக ரமோன் மக்சேசே விருது[1] விருதைப் பெற்றுக் கொண்டவர்.[2]
குடும்பம்[தொகு]
இவரின் தந்தை தேயிலைத்தோட்டத்தில் எழுத்தர் ஆகக் கடமையாற்றியவர். தாயார் இவர் 15 வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார். இவரது கணவர் முத்துவேலு சண்முகம். இவருக்கு இரு குழந்தைகளும், மூன்று பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள்.
கல்வி[தொகு]
இவர் கண்டி Mowbray கல்லூரியில் கல்வி பயின்றார். தனது 17வயதிலேயே 1951 இல் ஆசிரியரானார்.
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ The Hindu 27 July 2017. Retrieved 26 September 2017
- ↑ Gethsie Shanmugam a Magsaysay winner - The Daily Mirror (Sri Lanka) 27 July 2017. Retrieved 26 September 2017.-