கூகைக் கிழங்கு
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
கூகைக் கிழங்கு மலைப் பகுதிகளிலும், மலை அடிவாரங்களிலும் மழைக் காலங்களில் தானே வளரும் செடி இனத்தைச் சேர்ந்தது. இதைக் கிழங்காகப் பயிரிட்டு வருகின்றனர். வெள்ளை நிறமுடைய இதன் கிழங்கை அரரூட் கிழங்கு என்றும் கூறுவர். அரரூட் மாவு இதன் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
முற்றிய கிழங்கு தோல் நீக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு வெயிலில் உலர்த்தப்படுகிறது. காய்ந்த பின் இடித்துத் தூளாக்கப்படும். இந்த மாவு நீரில் கரைக்கப்பட்டு, மூன்று முறை வடிகட்டப்படும். இந்த மாவு வெயிலில் நன்கு உலர்த்தப்பட்டு, பயன்படுத்தும் பொருளாக மாற்றப்படும். சிறுநீர் சம்மந்தமான நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளைத் தீர்க்க அரரூட் மாவை பயன்படுத்துகிறார்கள்.
ஆதாரம்[தொகு]
காய்களின் மருத்துவப் பயன்கள், வைத்தியர் திலகம் டாக்டர் கே. ஆறுமுகம், உதயம் வெளியீடு, சென்னை, டிசம்பர் 1991.