குழுந்தலாயி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழுந்தலாயி அம்மன், ஓலைப்பிடாரி

அருள்மிகு குழுந்தலாயி அம்மன் திருக்கோவில் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் தில்லைநகர் பகுதியில் அமைந்துள்ளது. இது உறையூர் பகுதிக்கு காவல் தெய்வம் ஆகும். ஆண்டுதோறும் மாசி மாதம் இக்கோவிலுக்கு திருவிழா உறையூரில் நடைபெறும். அம்மன் வீதியுலா வருதல், தேரோட்டம், குட்டி குடித்தல், அருள்வாக்கு கூறுதல், மஞ்சள் நீராட்டு, விடையாற்றி போன்ற திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக தினசரி இங்கு வந்து திருவிழாவில் பங்கு பெறுவார்கள்.