குளித்தலை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளித்தலை வட்டம் , தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக குளித்தலை நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் தோகைமலை, குளித்தலை மற்றும் நங்கவரம் என மூன்று உள்வட்டங்களும், 45 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 206,731 ஆகும். அதில் 102,029 ஆண்களும், 104,702 பெண்களும் உள்ளனர். 50,997 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 72.7% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 73.2% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22006 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 975 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,345 மற்றும் 140 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.53%, இசுலாமியர்கள் 1.75%, கிறித்தவர்கள் 1.66% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளித்தலை_வட்டம்&oldid=2729962" இலிருந்து மீள்விக்கப்பட்டது