குற்றிப்புறம்
குற்றிப்புறம் | |
|---|---|
ஊர் | |
குற்றிப்புறத்தில் உள்ள எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி | |
| ஆள்கூறுகள்: 10°50′38″N 76°01′58″E / 10.84389°N 76.03278°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | மலப்புறம் |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
குற்றிப்புறம் (Kuttippuram) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத் தலைமையகம் ஆகும். இந்த நகரம் மலப்புரத்திலிருந்து தெற்கே 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குற்றிப்புறம் வழியாக பாரதப்புழா ஆறு ஓடுகிறது.
வரலாறு
[தொகு]பாரதப்புழா ஆற்றின் வடகரையில் உள்ள குற்றிப்புறம், இடைக்காலத்தில் கோழிக்கோடு சாமுத்திரி மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. [1] குட்டிப்புரம் தொடருந்து நிலையம் கேரளத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். கேரளத்தில் இரண்டாவது தொடருந்து பாதை 1861 ஆம் ஆண்டில் திரூரில் இருந்து குட்டிப்புரம் வரை அமைக்கப்பட்டது, அதே ஆண்டில் திரூரிலிருந்து பேப்பூர் வரை தொடருந்து பாதை நீட்டிக்கப்பட்டது. [2] 1940களில் சி. இராஜகோபாலாச்சாரி, எம். பக்தவத்சலம், யாக்கோப் ஹாசன் உள்ளிட்ட பல தேசியத் தலைவர்கள் குற்றிப்புறத்திற்கு வந்துள்ளனர். [1] இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பக்ருதின் அலி அகமதுவும் இங்கு வந்துள்ளார். [1] மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் அஸ்தி கேரளத்தில் திருநாவாய், குற்றிப்புறம், தவனூர் இடையே பாரதப்புழா ஆற்றங்கரையில் வைக்கப்பட்டது. [3] [4]
1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட குட்டிப்புரம் பாலம், கேரளத்தின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றாகும். குற்றிப்புறத்தின் மணற்பாங்கான ஆற்றங்கரையில் பாரதப்புழா ஆற்றின் அழகை விவரிக்கும் குற்றிப்புறம் பாலம் என்ற கவிதை கவிஞர் இடச்சேரி கோவிந்தன் நாயரால் எழுதப்பட்டது. குற்றிப்புறம் 1957 முதல் 2011 வரை கேரள சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகவும் இருந்தது, பின்னர் அது கோட்டக்கல் சட்டமன்றத் தொகுதியாக மாற்றப்பட்டது.
இடைக்கால மாமாங்கத் திருவிழாவின் மையமான திருநாவாயும், ஆழ்வாஞ்சேரி தம்பிரக்கலின் மையமாக இருந்த ஆதவநாடும் குற்றிப்புறத்தை ஒட்டி அமைந்துள்ளன. [3]
நிலவியல்
[தொகு]

குட்டிப்புரத்தின் அமைவிடம் 10°50′N 76°04′E / 10.83°N 76.07°E.[5] ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் சராசரியாக 15 மீ (49 அடி) உயரத்தில் உள்ளது.
தொழில்கள்
[தொகு]மாநிலத்தின் சில முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் குற்றிப்புறத்தில் உள்ளன. [6] வாலாஞ்சேரி நகரம் குற்றிப்புறம் ஊராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. குற்றிப்புறம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.
கல்வி நிறுவனங்கள்
[தொகு]கல்லூரி(கள்)
[தொகு]- எம். இ. எஸ். பொறியியல் கல்லூரி, 1994 இல் திறக்கப்பட்டது, இது கேரளத்தின் முதல் மற்றும் பழமையான சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும். [9]
- கே.எம்.சி.டி கல்லூரி, குற்றிப்புறம் [9]
பள்ளி(கள்)
[தொகு]இணைப்பு
[தொகு]

- தொடருந்து நிலையம்: குற்றிப்புறத்தில் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன, குட்டிப்புரம் தொடருந்து நிலையம் 1861 இல் திறக்கப்பட்டது, [2] இது மாநிலத்தின் பழமையான நிலையங்களில் ஒன்றாகும். மேலும் ஒரு சிறிய தொடருந்து நிலையமான - பெரசன்னூர் தொடருந்து நிலையமும் உள்ளது. திரூரில் முக்கிய தொடருந்து நிலையம் உள்ளது. அது இங்கிருந்து 18 கிலோமீட்டர்கள் (11 mi) தொலைவில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட அனைத்து தொடருந்துகளும் நிற்கும்.
- சாலை: குட்டிப்புரம் மற்ற நகரங்களுடன் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது, தேசிய நெடுஞ்சாலை-66 இந்த ஊர் வழியாக செல்கிறது. தே.நெ-66 குட்டிப்புரத்தை கோழிக்கோடு மற்றும் கொச்சி நகரங்களுடன் இணைக்கிறது. மா.நெ69 (திருச்சூர்-குட்டிப்புரம் மாநில நெடுஞ்சாலை) குற்றிப்புறத்தை திருச்சூர் நகரத்துடன் இணைக்கிறது. குற்றிப்புறம் பாலம் கேரளத்தின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றாகும், இது 1953 இல் கட்டப்பட்டது, இது தேசிய நெடுஞ்சாலை-66 வழியாக கோழிக்கோடு கொச்சியை இணைக்கிறது. [10] மலப்புறம், கோழிக்கோடு, கொச்சி, திருச்சூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூர், திருவனந்தபுரம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு இரவு நேர பயணத்திற்கு சில தனியார் பேருந்துகள் உள்ளன.
- அருகிலுள்ள வானூர்தி நிலையம்: கரிப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் தோராயமாக 50 கிலோமீட்டர்கள் (31 mi) தொலைவில் உள்ளது.
குற்றிப்புறம் ஊராட்சி ஒன்றியம்
[தொகு]குற்றிப்புறம் ஊராட்சி ஒன்றியம் என்பது பின் வரும் கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்திற்கான நிர்வாக அமைப்பாகும்.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- இடச்சேரி கோவிந்தன் நாயர் - கவிஞர்
- இக்பால் குற்றிப்புறம் - திரைக்கதை எழுத்தாளர்
- குற்றிப்புறம் கேசவன் நாயர் - கவிஞர்
- எம். டி. வாசுதேவன் நாயர் - மலையாள எழுத்தாளர் (குற்றிப்புறத்திற்கு எதிரே, பாரதப்புழா ஆற்றின் எதிர் கரையில் உள்ள கூடல்லூரில் பிறந்தார்)
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "The official website of Kuttippuram Grama Panchayat". Archived from the original on 2021-02-08. Retrieved 2021-01-30.
- 1 2 "ആ ചൂളംവിളി പിന്നെയും പിന്നെയും..." இம் மூலத்தில் இருந்து 30 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201130082010/https://www.mathrubhumi.com/malappuram/specials/50-years-of-malappuram/kerala-first-railway-line-tirur-to-beypore-1.3880175.
- 1 2 Kerala Charitram.
- ↑ "അമ്പതിന്റെ നിറവില് മലപ്പുറം; മലപ്പുറത്തിന്റെ മാനവിക മഹാപൈതൃകം" இம் மூலத்தில் இருந்து 7 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210507091729/https://www.mathrubhumi.com/malappuram/specials/50-years-of-malappuram/alamkode-leelakrishnan-writes-about-malappuram-1.3880292.
- ↑ Falling Rain Genomics, Inc - Kuttippuram
- ↑ "Brief Industrial Profile of Malappuram District 2017-18" (PDF). Archived from the original (PDF) on 2020-07-14. Retrieved 2024-01-30.
- ↑ "Kerala State Detergents and Chemicals Limited".
{{cite web}}: Missing or empty|url=(help) - ↑ "KELCERA".
{{cite web}}: Missing or empty|url=(help) - 1 2 3 4 "Kuttippuram PS". Retrieved 2021-03-25.
- ↑ "കുറ്റിപ്പുറം പാലത്തിന്റെ ശില്പി കെവി അബ്ദുള് അസീസ് നിര്യാതനായി". Malayalam One India. 2018-01-31. Retrieved 2021-01-24.