குருதிச் செவ்வணு புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குருதிச் செவ்வணு புற்றுநோய் (Polycythemia rubra veera ) எனபது இரத்தத்தில் மிக அதிக அளவில் முழுவளர்ச்சி அடையாத செவ்வணுகள் காணப்படும் ஒரு நோயாகும்.வெகு அரிதாகக் காணப்படும் நோய்.செவ்வணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும்.எலும்பின் மென்பொருளில் தோன்றும். முடிவில் எலும்பு மென்பொருள் தளர்வுற்றுச் செயலற்றுப் போகும். இந்நிலையில் வெள்ளை அணுக்களின் முன்னோடிகள் பெருகி,பின் லுகிமியா என்னும் குருதிப் புற்றும் தோன்றக்கூடும்.

அறிகுறிகள்; அதிகத் தலை வலி, தளர்ச்சியும் கூடவேக் காணப்படும். கணையம் பெரிதாக வீக்கமுற்றுக் காணப்படும். செவ்வணுக்களின் அதிகரித்த எண்ணிகை அவைகளின் பருபனளவு கூடக் காரணமாய் அமைந்து,அதன் காரணமாக இரத்தக் குழாய்கள் வெடித்து உதிரக் கசிவு ஏற்பட வாய்பாகும். செவ்வணுக்களின் எண்ணிக்கை 10 மில்லியன் அளவாக உயரக்கூடும்.பொதுவாக 45% ஆகு உள்ள அதன் பருமனளவு அதிகரித்துக் காணப்படும்.

போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாத போதும் செவ்வணுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். இந்நிலை இதய,நுரைஈரல் நோயினாலும் உயர்ந்த மலைப்பாங்கான இடங்களில் வாழ்பவர்களிடமும் காணப்படலாம். சில சிறுநீரகம் தொடர்பான நோயினாலும் குறிப்பாக சிறுநீரப் புற்றுநோய் கண்டவர்களிடமும் செவ்வணு அதிகரித்துக் காணப்படும். எனவெ காரணங்களைத் தெளிவாகத் தெரிந்து செயல்பட வேண்டும். எலும்பு மென்பொருள் ஆய்வு நிலைமையினைத் தெளிவாகக் காட்டவல்லது.

மருத்துவம் ; நோயாளியின் செவ்வணுக்களின் எண்ணிக்கையினைக் குறைக்க வேண்டும். இது

அ) கதிர் மருத்துவம்

ஆ) வேதி மருந்துச் சிகிச்சை

இ) நாளங்களை வெட்டி குருதியினை அகற்றும்-வடிக்கும்- முறை.

ஆக மூன்று வகைகளில் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.குருதி வடிப்பு முறையில் குருதியின் பருமனளவு குறைக்கப்படலாம்.ஆனாலும் குருதி பாகுநிலையில் இருப்பதால் ,வடித்து அகற்றுவது கூட கடினமாக இருக்கிறது. மேலும் இதன் விளைவும் தற்காலிகமானதே.ஏனெனில் நோயின் காரணத்தினை இது எவ்வகையிலும் பாதிப்பதில்லை. வேதி மருந்து சிகிச்சையில் பூசல்பான்(Busulphan )எனும் மருந்து அதிகம் பயன்படுகிறது. அடிக்கடிக் கொடுக்கபட வேண்டும்.உயிரணுக்களைத் தாக்கும் நச்சுத் தன்மையுடையது. கதிர் மருத்துவம் சிறந்ததாக உள்ளது.

கதிர்வீச்சு பொதுவாகக் கணையத்திற்குக்( Spleen) கொடுக்கப்படுகிறது.கதிர்வீச்சிக் குளியல் (Radiation bath ), கழுத்து முதல் இடுப்பு வரையுள்ளப் பகுதிக்கு கதிர் மருத்துவம் கொடுப்பது என பல முறைகளுள்ளன.தற்போது கதிரியக்கமுடைய பாசுபரசு 32 பயன்படுத்தப்படுகிறது. இத்தனிமம் எல்லா உயிரணுக்களிலும் காணப்படும் ஒரு தனிமமாகும். எனவே விரைந்து பெருகும் உயிரணுக்களில் சற்று அதிகமாகவே இது காணப்படும். எலும்பு மென் பொருளிலும் சேருகிறது. 1 முதல் 2 மெகா பெக்கரல் (MBq ) பாசுபரசு 32 ஊசிமூலமும் 8 முதல் 12 மி.க்யூரி அளவு வாய்வழியாகவும் நோயாளிக்கு, நோயின் தன்மையைப் பொறுத்து கொடுக்கப்படுகிறது. வெளிநோயாளியிகவே மருத்துவம் பெறலாம். கொடுக்கப்பட்ட மருந்து மலம் ,சிறுநீர் வழி வெளிப்பட்டு விடுகிறது.6 முதல் 8 வாரங்களில் செவ்வணுக்களின் எண்ணிக்கை்கை குறையத்தொடங்குகிறது. மீண்டும் 3 மாதங்கள் கழிந்து மருத்துவம் செய்யப்பட வேண்டும். இவையாவும் நோயாளியின் நிலை, செவ்வணுக்களின் எண்ணிக்கை இவைகளைப் பொறுத்திருக்கிறது.

ஒருமுறை பாசுபரசு 32 கொடுத்தாலே 85% நோயாளிகளிடம் நல்ல பலன் கிடைக்கிறது. பலனளிக்காத வர்களுக்கு பிறமருந்துகளும் குருதி அகற்றும் முறையும் மேற்கொள்ளப்படுகின்றன. 2 வருடங்களாவது நோயாளி,நோயறிகுறி இன்றி நலமாக உள்ளார். P 32 கொடுப்பதாலும் லுக்கிமியா தோன்றும் வாய்ப்பு சற்று அதிகமாகலாம். இல்லாவிடினும் லுக்கிமியா வரும். P 32 மருத்துவமே இப்போதைக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.

மருத்துவமே இல்லாமலும் நோயாளி 5 வருடங்கள் வாழக்கூடும். இன்றைய மருத்துவம் இதனை இரட்டிப்பாக்கி உள்ளது. மென்பொருள் செயலற்ற நிலையில் இறப்பு ஏற்படுகிறது.

15P32 →→→→ β (14 நாள்கள்)→→ 16S32 இங்கு β துகள்களே அழிவினைச் செய்கின்றன.